ராமநாதபுரம்: ராமநாதபுரம் லட்சுமிபுரத்தில் அமைந்துள்ள தாயுமானவர் தபோவனத்தில் குருபூஜை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த இரு நாட்களாக தாயுமானவர் பாடல்கள், திருவாசகம், முற்றோதல் நடந்தது. நேற்று (பிப்.,10 ல் ) காலையில் மூலவர் தாயுமான சுவாமிக்கு 11 வகையான அபிஷேகம் ஸ்படிக லிங்கத்தின் வழியாக நடந்தது. ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே மூலவர் அமைந்துள்ள இடத்திற்குஅனுமதி என்பதால் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பஜனை நிகழ்ச்சி நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் ராமகிருஷ்ண தபோவனம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சுத்தானந்த தலைமையில் பக்தி சொற்பொழிவு, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை சுவாமி ருத்ரானந்தா மற்றும் விழாக் குழுவினர் செய்தனர்.