கூடலூர்; கூடலூர், புளியம்பாறை ஸ்ரீ ஆயிரம் வில்லி, பகவதி கோவில் தேர் தஊர்வலத்தில் பெண்கள் தாலப்பொலி ஏந்தி பங்கேற்றனர்.
கூடலூர், புளியம்பாறை ஸ்ரீ ஆயிரம் வில்லி, பகவதி கோவில் தேர் திருவிழா, 14ம் தேதி அதிகாலை 5:00 கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை 9:00 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. 11:00 மணிக்கு பெரிய வீடு வண்ணார குடியிலிருந்து இளநீர் பூங்குழல் ஊர்வலம் துவங்கி கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து மதிய பூஜை நடந்தது. மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. 6:00 மணிக்கு தீபாதாரணை, அத்தாழ பூஜையும், தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம், காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், வழிபாட்டு பூஜைகள், 11:00 மணிக்கு அருள் வாக்கு வழங்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து மத்திய பூஜை நடந்தது. மதியம் 12:00 மணிக்கு மதிய பூஜை நடந்தது. 2:00 மணிக்கு காணிக்கை பொருட்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7:30 மணிக்கு, மட்டம் மாரியம்மன் அம்மன் கோவிலில் இருந்து, செண்டை மேளம், பழங்குடியினர் இசையுடன் தேர் ஊர்வலம் துங்கியது. பெண்கள் தாலப்பொலி ஏந்தி பங்கேற்றனர். தேர் ஊர்வலம் புளியம்பாடி வழியாக சென்று கோவிலில் நிறைவு பெற்றது. தொடர்ந்து குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நேற்று, காலை 7:00 மணிக்கு உஷபூஜை, வழிபாடு பூஜைகளுடன் விழா நிறைவு பெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்தனர்.