ரிஷிகேஷ் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தின் தலைவர் சாஷாத்கிருதானந்த சரஸ்வதி, ஆனைகட்டி ஆர்ஷ வித்யா குருகுலம் தலைமை ஆச்சார்யா சதத்மானந்தா சரஸ்வதி, ஆச்சார்யா சங்கரானந்தா சரஸ்வதி, பேரூர் ஆதினம் மருதாசல அடிகள், கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடக்கிறது. கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி இன்று (19ம் தேதி) காலை 9 மணிக்கு துவங்குகிறது. முதல் கால யாக வேள்வி நாளை (20ம் தேதி), இரண்டாம், மூன்றாம் கால யாக வேள்வி நாளை மறுதினம் (21ம் தேதி), நான்காம் கால வேள்வி 22ம் தேதியும் நடைபெறும். தொடர்ந்து, வடபத்ர காளியம்மன், லலிதாம்பிகை அம்மனுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கோயில் நிறுவனர் ஜெகதாத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கும்பாபிஷேக விழாவுக்கு 5,000க்கு மேற்பட்ட பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கிறோம். வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டிருக்கிறது. தற்காலிக கழிப்பறைகள் அமைக்கிறோம்,’’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘‘ஸ்ரீலலிதாம்பிகா அறக்கட்டளையின் கீழ் கிராமப்புற மக்கள், மலைவாழ் மக்கள், முதியோர்களுக்கு மருத்துவ உதவி, அன்னதானம் அளிக்கப்படுகிறது. புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை, மருந்து இலவசமாக கிடைக்கச் செய்கிறோம். மருத்துவ முகாம் நடத்துகிறோம். லலிதாம்பிகா பீடத்தில் தியான பயிற்சி அளிக்கிறோம். லலிதா சகஸ்ரநாமத்தை தமிழில் மொழி பெயர்த்து, 10,000 பேருக்கு உபதேசம் செய்திருக்கிறோம்,’’ என்றார். அறக்கட்டளை செயற்குழு உறுப்பினர்கள் கணேஷ், சாய் முரளி, விஜய் ஆனந்த் உடனிருந்தனர்.