Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளகோவிலில் வீரக்குமாரசுவாமி ... கோவை அய்யப்பன் பூஜா சங்கத்தில் ஸ்ரீ ராகவேந்திர ஸப்தாஹ விழா கோவை அய்யப்பன் பூஜா சங்கத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இறைவனை மனதில் நிறுத்தி, மனமுருகி வழிபட்டால், இன்பமாக வாழலாம்!
எழுத்தின் அளவு:
இறைவனை மனதில் நிறுத்தி, மனமுருகி வழிபட்டால், இன்பமாக வாழலாம்!

பதிவு செய்த நாள்

19 பிப்
2026
11:02

திருப்பூர்: ‘‘இறைவனை மனதில் நிறுத்தி, மனமுருகி வழிபட்டால், இன்பமாக வாழலாம்’’ என, சைவ சித்தாந்த சொற்பொழிவாளர் சிவசண்முகம் பேசினார்.


திருப்பூர், ஹார்வே குமாரசாமி திருமண மண்டபத்திலுள்ள திருவருள் அரங்கில், கொங்கு மண்டல ஆடல் வல்லான் அறக்கட்டளை சார்பில், திருவாசகம் பயிற்சி வகுப்பு, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாலை நடக்கிறது. நேற்றுமுன்தினம் சைவ சித்தாந்த சொற்பொழிவாளர் சிவசண்முகம் பேசியதாவது: ‘கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனுாறி நின்று’ என திருவாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘சிறந்தடியார்’ என குறிப்பிடப்பட்டுள்ளதால், சிறந்த அடியார், சிறப்பு இல்லாத அடியார் என இரண்டுவகை அடியார்கள் இருப்பதாக தவறாக பொருள் கொள்ளக்கூடாது. ‘நெய் கலந்தாற் போலச் சிறந்து’, ‘அடியார் சிந்தனையுள் தேனுாறி’ என பிரித்து பொருள் கொள்ள வேண்டும்.


கறந்த பாலுடன் இனிப்பு கட்டியும், பழச்சாறும் சேர்த்து குடிக்கும் பானம் எவ்வளவு இனிப்பாக இருக்கும்? அந்தளவு அடியார்களுக்கு இறைவன் இனிக்கிறார் என்பதே இதன் பொருள். யாரெல்லாம் இறைவனை மனமுருகி வழிபடுகின்றனரோ, அவர்கள் அனைவருமே அடியார்கள் தான். அவர்கள் பல பக்குவ நிலைகளில் இருக்கலாம். வெவ்வேறு வகை வழிபாடு முறைகளை கையாளலாம். ஆனாலும், இறைவனை யார், எங்கிருந்து, எந்த வழிமுறையில் வழிபட்டாலும், அவர்கள் அடியார்களே! இறைவனை வழிபடும் அடியார்கள், இன்பமாக இருப்பர். இறைவன் இன்பமே வடிவானவர். அதையே தான் அனைத்து சமயங்களும் சொல்கின்றன. அத்தகைய இறைவனை மனதில் நிறுத்தி, மனமுருகி வழிபட்டால், நாமும் இன்பமாக இருப்போம். இவ்வாறு, அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புட்குழி: திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில் மாசி பிரம்மோத்சவத்தின் ஏழாவது நாளான இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு ... மேலும்
 
temple news
 புவனகிரி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.புவனகிரியில், ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar