காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு முத்துக்களால் ஆன அலங்கார கவசம் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21பிப் 2026 02:02
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு அலங்கார சேவை அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ ரங்கா எண்டர்பிரைசஸ் ஹைதராபாத் அவர்கள் கோயிலில் ஞானப் பிரசுனாம்பிகை சமேத ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் உற்சவ மூர்த்திகளுக்கு முத்துக்களால் ஆன அலங்கார கவசங்களை காணிக்கையாக கோயில் செயல் அலுவலர் பாபி ரெட்டியிடம் வழங்கினார்கள். முன்னதாக காணிக்கையாளர்களுக்கு கோயிலில் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் மூலவர் சன்னதியில் சிறப்பு தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்தப் பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர். மேலும் கோயில் வேதப் பண்டிதர்கள் சிறப்பு வேத ஆசிர்வாதமும் செய்தனர்.