சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மார்ச் 3ல் மடப்புரம் கோயில் நடை அடைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2026 02:02
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை நடை சாத்தப்படுவதாக அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 3ம் தேதி செவ்வாய்கிழமை மதியம் 3:20க்கு தொடங்கி மாலை 5:47 மந்திம , மோட்ச காலம் 6:48 மணிக்கு சந்திரகிரஹணம் முடிவடைகிறது. எனவே காலசந்தி பூஜை நடத்தப்பட்டு இரவு ஒன்பது மணிக்கு நடை சாத்தப்படும், மறுநாள் காலை ஆறு மணிக்கு கிரஹண சம்பிரதாயங்கள் முடிந்து வழக்கம் போல நடை திறக்கப்படும் என திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.