ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2026 08:03
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சியையொட்டி, சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நேற்று நடந்தது.
ரிஷிவந்தியத்தில் உள்ள சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சனி பகவான் கிழக்கு நோக்கிய திசையில் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனி பகவான் நேற்று காலை 8.24 மணியளவில் கும்ப ராசியிலிருந்து மீனராசிக்கு பிரவேசித்தார். சனி பெயர்ச்சியொட்டி, சனி பகவான் சுவாமிக்கு பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம் உட்பட 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நாகராஜ், சோமு குருக்கள் பூஜைகளை செய்தனர். கட்டளைதாரர்கள் கந்தவிலாஸ் ஜெயக்குமார் குடும்பத்தினர் பூஜைக்கான ஏற்பாடுகளையும், கோவில் எழுத்தர் விமல் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினையும் செய்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று எள் தீபமேற்றி, சுவாமி வழிபாடு செய்தனர். பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.