சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில், நந்தனார் மடவளாகத்தில், திருநாளைப்போவார் எனும், 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் கோவில் மற்றும் சவுந்தரநாயகி சமேத சிவலோகநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் 35 ஆண்டுகளுக்கு பின், நந்தனார் கல்விக்கழக தலைவர் மணிரத்தினத்தால், புனரமைக்கப்பட்டு கடந்த ஜனவரியில், கும்பாபிஷேகம் நடந்தது. அதே வளாகத்தில் நந்தனார் தியான மண்டபம் புதுப்பிக்கப்பட்டு, அவரது வரலாறும், சுவாமி சகஜானந்தா வரலாறும் வைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நாள்தோறும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்து வந்தது. 48 வது நாள் மாலையில் மண்டாலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது. இதில், நந்தனார் கல்வி கழகத் தலைவர் மணிரத்தினம், செயலர் திருவாசகம், பொருளாளர் ஜெயச்சந்திரன், ஆலோசகர் தெய்வநாயகம், மட நிர்வாக குழு செயலர் வினோபா, நிர்வாகிகள் சங்கரன், பன்னீர்செல்வம், கமல் மணிரத்தினம், அரவிந்த் மணிரத்தினம், கஜேந்திரன், ரவி, காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமொழி, வட்டார தலைவர் தமிழரசன், சங்கர், ஜெயசீலன், மாவட்ட செயலாளர் ஷானுஜாகிர் உசேன், புகழேந்தி, அரிகிருஷ்ணன், இளைஞர் காங்., மாவட்ட தலைவர் கிருபாகரன், பாஸ்கர், பிரகாஷ், சுரேஷ், வீரவேல், ஆசிரியர் ரமணிராஜன், அன்பழகன், வழக்கறிஞர் வேல்ராமலிங்கம், வைத்தி உள்ளிட்டோர்பங்கேற்றனர்.