திருத்தணி: திருத்தணி காந்தி நகரில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெறும்.
நடப்பாண்டிற்கான தீமிதி திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 8:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. ஏப்., 1ம் தேதி திரவுபதி அம்மன் திருக்கல்யாணம், 3ம் தேதி சுபத்திரை அம்மன் திருக்கல்யாணம், 6ம் தேதி அர்ஜுனன் தபசு, 12ம் தேதி துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி விழா நடைபெறும். வரும் 13ம் தேதி தருமர் பட்டாபிஷேகத்துடன் தீமிதி விழா நிறைவுபெறுகிறது. இதுதவிர, தினமும் காலை மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மதியம் 1:30 மணி – மாலை 5:00 மணி வரை மகாபாரத சொற்பொழிவு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.