Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கனவில் குரங்கு அடிக்கடி வந்து ... மாதங்களில் சிறந்தது மார்கழி ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நல்லவனே! நீ இன்னும் நல்லவனாகு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2013
12:01

*உலகம் முழுவதும் நம்முடைய அனுபவத்திற்குரியதாகும். அதனால், ஒன்றையும் வேண்டி நிற்காதீர்கள். வேண்டுதல் என்பது நம்முடைய பலவீனமாகும். எதிர்பார்ப்பு வைக்கும்போது நீங்கள் பிச்சைக்காரர்களாகி விடுவீர்கள். உண்மையில் நீங்கள் அனைவரும் ராஜாவீட்டுப் பிள்ளைகள்.
*யாரையும் அடித்து விடுவது எளிய செயல். ஆனால், எழும்கையைத் தாழ்த்தி அமைதி காப்பதோ மிக கடினம்.
*பலவந்தமாகச் செய்யப்படும் சீர்திருத்த முயற்சிகளால் பலன் கிடைப்பதில்லை. நீ தீயவன் என்று ஒருவனைச் சொல்லித் திருத்த முயற்சிப்பதை விட, நீ நல்லவன் தான்! ஆனால், இன்னும் நல்லவனாக ஆகவேண்டும்! என்று சொல்வது நல்லது.
*அன்பு ஒருபோதும் குறை கூறுவதில்லை. பேராசை உணர்வால் தான் ஒருவரைக் குறை சொல்லத் துணிகிறோம்.
*உள்ளங்களை எப்போதும் திறந்து வையுங்கள். பிரபஞ்சத்தில் உள்ள நல்ல விஷயங்கள் எல்லாம் உங்களை வந்தடையட்டும்.
*ஒரு உயிர் பெரியது என்றும், இன்னொன்று சிறியது என்றும் எப்படிக் கூற முடியும்? எறும்புக்கும், தேவதூதனுக்கும் இடையே கூட அணுவளவும் வேற்றுமை பாராட்ட இடமில்லை.
*எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு. எல்லா மனிதர்களிடமும் நட்பு பாராட்டு. எல்லாப் பூக்களிலும் தேன் நிறைந்திருக்கிறது. எல்லாரிடமும் நல்லது சகோதரரே நல்லது என்று சொல். ஆனால், உனது சொந்த நெறியை உறுதியாகப் பற்றிக் கொண்டிரு.
*இந்த உலகம் பெரிய உடற்பயிற்சி சாலை. நம்மை வலிமையுள்ளவர்களாக்கிக் கொள்வதற்காகவே நாம் இங்கு வந்திருக்கிறோம்.
*இன்பமே மனிதனுடைய நோக்கமாக இருக்கிறது என்பது சரியல்ல. எத்தனையோ பேர் துன்பத்தைத் தேட வும் உலகில் பிறப்பெடுக்கிறார்கள்.
*பிறருக்கு செலுத்தும் பணிவுக்கும், மரியாதைக்கும் பிரதிபலனை எதிர்பார்க்கும்வரை மனிதனிடம் உண்மையான அன்பு உண்டாகாது.
*உழைப்பே வடிவாகத் திகழும், சிங்கத்தின் இதயம் படைத்த ஆண்மகனையே திருமகள் நாடி வருகிறாள்.
*உலகிற்கு நன்மை செய்வதே உங்களின் நோக்கமாகட்டும். பதவி, பட்டம், புகழ் என்று தேடி அலையாதீர்கள்.
*உறங்கிக் கொண்டிருக்க இது நேரம் அல்ல. அனைவரும் ஒன்றுபடுங்கள். பாடுபட்டு உழைத்து முன்னேறுங்கள்.
*பணியில் ஈடுபடும் போது எப்போதும் இதை நினைவில் கொள்ளுங்கள். அமைதி, மவுனம், ஒழுக்கம் இவற்றில் கருத்து செலுத்தியபடி பணியாற்றுங்கள்.
*அடக்கப்படாத மனம் நம்மை கீழ்நோக்கி அழைத்துச் செல்லும். ஆனால், அடக்கப்பட்ட மனமோ நமக்கு எப்போதும் பாதுகாப்பு அளிக்கும்.
*அற்பமான எந்த விஷயத்தையும் நாடுவது கூடாது. அதை மனதால் எண்ணுவதோ, கைகளால் தீண்டுவதோ கூடாது.
*இயற்கையை எதிர்த்துப் போராடுங்கள். அந்த ஓயாத போரே மனித முன்னேற்றத்தின் படிக்கட்டுகள்.
*வாழ்வில் பெரும் தியாகம் செய்தவர்களால் மட்டுமே பெரிய செயல்களைச் சாதிக்கும் வல்லமை கிடைக்கும்.
-சுவாமி விவேகானந்தர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar