* எப்போதும் அழகாகவும், துாய்மையாகவும் இருங்கள். * ஒளு செய்யும் போது ஒருவர் உயிர் விட்டால் ஷஹீது (தியாகி) பதவி கிடைக்கும். * வெள்ளி அன்று இரவில் சூரத்துல் பகரா அத்தியாயத்தை ஓதினால் ஏழு வானம், ஏழு பூமிகளின் நடுவில் ஜோதிச்சுடர் கிடைக்கும். * விதவை, ஏழைக்காக பாடுபடும் நபர் தர்ம யுத்தத்தில் ஈடுபட்டவர் ஆவார். * வரவுக்கு ஏற்ப செலவு செய்பவர் ஒருபோதும் ஏழையாக மாட்டார். * கொடுமைக்காரனுக்கு இறுதி தீர்ப்பு நாள் இருள் மிக்கதாக இருக்கும். * சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்வது நல்லதல்ல.