கடலாடி: கடலாடியில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கடலாடியில் உள்ள காமாட்சி அம்மன் மற்றும் நல்ல காமாட்சி அம்மனுக்கு கடந்த மார்ச் 30 அன்று காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. கோவில் முன்புறம் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு ஏராளமான பெண்கள் பங்கேற்ற விளக்கு பூஜை நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு நேர்த்திக்கடன் பக்தர்களின் பால்குட ஊர்வலம் நடந்தது. மாலை 4:30 மணிக்கு கரும்பாலை தொட்டி, அக்னி சட்டி மாவிளக்கு உள்ளிட்ட நேர்த்திக்கடன் பூஜைகளை பக்தர்கள் செலுத்தினர். இரவு 6:00 மணிக்கு அக்னி சட்டி ஊர்வலம் நடந்தது. இரவு 10:00 மணிக்கு முன்னோர் தெய்வங்களான நல்லண்ணா, லாடன், ஒண்டிவீரன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை செய்து காவு கொடுக்கும் நிகழ்ச்சி, 21 சாட்டையடி பூஜையுடன் குறி சொல்லும் நிகழ்ச்சியும் கும்பம் எடுத்தல் உள்ளிட்டவைகளும் நடந்தது. இன்று காலை சேத்தாண்டி வேடமும், மாலையில் விளையாட்டு போட்டிகளும், இரவில் பூச்செரிதல் உற்ஸவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை பொங்கல் விழா கமிட்டியாளர்கள் மற்றும் கவுரவ செட்டியார் மகாஜன சங்கம், இளைஞர் பேரவையினர் செய்திருந்தனர்.