மதினா நகரிலுள்ள பள்ளிவாசலான மஸ்ஜிதின் நபவியில் பெண் துப்புரவுப் பணியாளர் ஒருவர் இறந்தார். ஒரு வாரம் கழித்து அங்கு வந்த நாயகம் அந்த பெண்ணுக்காக மண்ணறையில் தொழுகை செய்தார். ‘‘அந்தப் பெண் சுவனத்தில் இருப்பதை கண்டேன். உன்னை இந்த அளவிற்கு உயர்த்தியது எது என அவளிடம் கேட்டேன். அக்கறையுடன் செய்த துப்புரவு பணியே என்றாள்’’ என அங்கிருந்த தோழர்களிடம் சொன்னார். அக்கறையுடன் வேலை செய்; சுவனம் செல்வாய்.