* கோயிலுக்கு சென்று கடவுளை வழிபடு. நினைத்தது நடக்கும். * அம்மாவும், அப்பாவும் கண்கண்ட தெய்வம். அவர்கள் மீது அன்புடன் இரு. * சிக்கனமாக இருந்து பொருளைத் தேடு. அதுவே வளர்ச்சிக்கான வழி. * உனக்கு கிடைக்காததை எண்ணி வருத்தப்படாதே. அதை மறந்துவிடு. * பிறர் உனக்கு கெடுதல் செய்தால் அதை மறப்பதே உயர்ந்த செயல். * தேவையிருக்கும் இடம் சென்று உதவுவதே, ஆட்சி செய்வோரின் பணி. * வாரிசுகள் ஒற்றுமையாக வாழ்வதே பரம்பரையின் வளர்ச்சிக்கான வழி. * கொடுத்த வாக்கை காப்பாற்றுவதே கல்வி கற்றதன் பயன். * சிறிய செயலாக இருந்தாலும் அதை யோசித்து செய். * தாய்ப்பாலை குடித்து வளரும் குழந்தையே பலம் பெறும். * தன் குழந்தை அறிவாளியாக இருப்பதே பெற்றோருக்கு பெருமை. * உன்னிடம் உள்ள சொத்தை விட கல்வியே உண்மையான சொத்து. * பெற்றோர், மனைவி, குழந்தை என குடும்பத்துடன் வாழ்வதே நல்லது. * அக்கம்பக்கத்தினருடன் அன்புடன் பழகு. அதுவே நலம் தரும். * ஆதாரமாக விளங்கும் எண்ணும், எழுத்தும் நமக்கு கண் போன்றவை.