* உண்மையை பேசு. உன் வார்த்தைக்கு மதிப்பு கூடும். * நல்லவர்களின் மனம் நடுங்கும்படி செயல்படாதே. * நல்ல மனதுடன் இருப்பதே உயர்ந்த வழிபாடு. * பணம் மட்டுமே வாழ்க்கை என நினைக்கும் நபர்களுடன் நட்பு கொள்ளாதே. * எப்போதும் பொதுநோக்கத்துடன் செயல்படு. * பசியால் துன்பப்படும் உயிர்களுக்கு உணவு கொடு. இதுவே தர்மத்தில் சிறந்தது. * ஜாதி, சமயம், இனம், நிறம், நாடு, மொழி என எந்த வகையிலும் பேதம் பார்க்காதே. * பிற உயிர்கள் மீது இரக்கப்படு. கடவுள் உனக்கு நிச்சயம் அருள்புரிவார். * மரங்களை அழிக்காதே. அது பாவச்செயல். * எல்லாம் கடவுளின் செயல் என அறிந்தால் துன்பம் வராது. * மெதுவாக பேசு. இது உன் ரகசியங்களை பாதுகாக்கும். * பறவைகளை கூண்டில் அடைத்து அவற்றை துன்புறுத்தாதே. * புண்ணியத்தால் மனித பிறவி கிடைத்துள்ளது. சரியாக பயன்படுத்து. * பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டு பொய் சொல்லாதே. * ‘எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்’ என கடவுளிடம் வேண்டிக்கொள். * அனைவரிடமும் நல்லவிதமாக பேசி புண்ணியத்தை தேடு.