* நிம்மதியாக வாழ விரும்பினால் ஆசையைக் குறை. * சஷ்டி விரதம் இருந்தால் சகல வளமும் உண்டாகும். * நல்ல எண்ணம் இருக்கும் மனமே கடவுளின் கோயில். * அடியார்களை வணங்கினால் கடவுளின் அருளை பெறலாம். * மகான்களின் உபதேசம் கேட்பது காது வழியாக சாப்பிடும் உணவு. * நீதி நுால்களை படித்தால் ஒழுக்கம் தானாக வரும். * திருக்குறளை படித்தால் வாய் மணக்கும்; கேட்டால் காது மணக்கும். * கலியுகத்தில் பக்தி செய்தால் மோட்சம் பெறலாம். * உடற்பயிற்சியால் உடலும், தியானத்தால் மனமும் வலிமை பெறும். * சிரித்த முகத்துடன் பழகு. மகிழ்ச்சி பொங்கும். * உன்னுடைய வாழ்வு குடும்பத்துக்கும், நாட்டுக்கும் பயன் தர வேண்டும். * பெற்றோரை விட சிறந்தவர் யாருமில்லை. * அன்பும், அறிவும் அவை வெளிப்படும்போது மட்டுமே உணர முடியும். * பெரியவர்களை கண்டதும் வணங்கு. ஒருபோதும் அலட்சியம் செய்யாதே. * நியாயமற்ற வழியில் வந்த பணத்தை கையால் தொடாதே. * எந்தப் பணியிலும் நிதானத்துடன் ஈடுபடு. வெற்றி பெறுவாய். * கடவுளை அன்புடன் வணங்கு. அவரிடம் வியாபாரம் செய்யாதே.