நல்ல ஆண்டாக அமையனும்: தஞ்சை பெரியகோயிலில் தமிழ்ப் புத்தாண்டு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2026 11:04
தஞ்சாவூர்: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. காலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் பிரசித்தி பெற்ற தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்கோயிலில் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டது. காலை முதலே பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்ப ட்டிருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று மாரியம்மனை தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு நல்ல ஆண்டாக அமைய வேண்டும் என மனமுருகி வேண்டிக்கொண்டனர்.