Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி கோவில்களில் புத்தாண்டு ... பாதாள செம்பு முருகன் கோயிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜை பாதாள செம்பு முருகன் கோயிலில் தமிழ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா: குதிரை ஊர்வலம்
எழுத்தின் அளவு:
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா: குதிரை ஊர்வலம்

பதிவு செய்த நாள்

14 ஏப்
2026
10:04

அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு, ராயம்பாளையத்திலிருந்து ஆகாசராயர் கோவிலுக்கு 500க்கும் மேற்பட்ட மக்கள் குதிரையை சுமந்து ஊர்வலமாக சென்றனர்.

கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதாகவும், ஆசியாவில் மூன்றாவது பெரிய தேர் என பெருமை கொண்டதாகவும் விளங்கும் ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர் திருவிழா வரும் 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. சித்திரை தேர் திருவிழாவை,ஆண்டுதோறும் பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்பு வரும் செவ்வாய்கிழமை அவிநாசி, ராயம்பாளையம் பகுதி கிராம மக்கள் அவிநாசி மங்கலம் ரோட்டில் ராயன் கோவில் காலனி பகுதியில் எழுந்தருளியுள்ள ஆகாசராயர் கோவிலுக்கு மலர்களால் அலங்கரித்த ஐந்து குதிரைகளை சப்பரத்தில் கட்டி அப்பகுதி இளைஞர்கள் தோளில் சுமந்தபடி நடுவச்சேரி ரோடு , மடத்துப்பாளையம் ரோடு , தாலுகா ஆபிஸ், கோவை சேலம் மெயின் ரோடு, ராயன் கோவில் காலணி வழியாக ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.

குதிரையைச் சுமந்து ஊர்வலமாக வரும்பொழுது,ஆங்காங்கே சப்பரத்தை சுமந்து வரும் இளைஞர்களுக்கு தண்ணீர் ஊற்றியும், குடிநீர், மோர் மற்றும் குளிர்பானம் ஆகியவை வழங்கியும் உற்சாகத்துடன் வரவேற்றனர். அவிநாசி நகராட்சி சார்பில் அலுவலகம் முன்பு குதிரைகளுக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தி பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆகாசராயருக்கு பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 
temple news
கேரளா; ஆதிசங்கரர்,  இவர் அத்வைத வேதாந்தக் கொள்கையைத் தோற்றுவித்த மகான். இவர் சிறுவயதில் உபநயனம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணாஸ்ரத்தில், 76 ஆம் ஆண்டு ஆராதனை விழா இன்று ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
கேரளா: கேரளா, புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று காலை சித்திரை விஷூக்கனி தரிசனம் சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar