பதிவு செய்த நாள்
20
ஏப்
2026
01:04
செங்கல்பட்டு; செங்கல்பட்டு வ.உ.சி., தெருவில், புகழ்பெற்ற காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவில், ஹந்து சமய அறத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 2011ம் ஆண்டு, நவ., 13ம் தேதி, கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
அதன்பின், கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு, கும்பாபிஷேக விழா நடத்த, கோவில் நிர்வாகம், செங்கை சிவனடியார் பெருமன்றத்தினர் மற்றும் நகர பொதுமக்கள் முடிவு செய்தனர்.
அதன்பின், ஆவின் சு. சந்திரசேகர் ஆவின் முன்னாள் பொறியாளர் தலைமையில் குழுவினர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணியில், கிழக்கு நுழைவாயில் கோபுரம், வாகன மண்டபம், வசந்த மண்டபம், புதிய கொடிமரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் துவங்கி, கடந்த சில தினங்களுக்கு முன், திருப்பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழாவையொட்டி, விக்னேஷ்வர பூஜையுடன், கணபதி ேஹாமம், நவகிரஹ ேஹாமம், லட்சுமி ேஹாமம், கடந்த 17ம் தேதி நடைபெற்றது. கும்பாபிஷேக விழா இன்று 20ம் தேதி காலை 9:00 மணி முதல் காலை 10:15 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. விழாவிற்கு, செங்கல்பட்டு நகரைச்சுற்றி, ஏராளமான பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். விழா ஏற்பாடுகளை, செங்கை சிவனடியார் பெருமன்றத்தினர், நகர பொதுமக்கள் செய்துவருகின்றனர்.
அன்னதான திட்டம்; இத்திருக்கோவிலில் அன்னதானம் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதில், பங்குபெற விருப்பம் உள்ளவர்கள், 50 பேருக்கு, 1750 ரூபாய் (ஒரு நாள் மட்டு்) திருக்கோவில் அலுவலகத்தில் செலுத்தி அச்சு ரசீது பெற்றுக்கொள்ளலாம்.
கோவில் விழாக்கள்; சித்திரை மாதம் பவுர்ணமி விழா, வைகாசி மாதம் விசாகம் முருகப்பெருமானுக்கு, ஆணி மாதம் நடராஜர் உற்சவம், ஆணி திருமஞ்சனம், ஆடி மாதத்தில், ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு ஆடிப்பூரம் உற்சவம், புரட்டாசி மாதம், 10 நாட்கள் நவராத்திரி உற்சவம், ஐப்பசி மாதம் ஆறு நாட்கள் முருகப்பெருமனுக்கு சஷ்டி உற்சவம், திருக்கால்யணம், கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம், மார்க்கழி மாதத்தில் 30 நாட்கள் மாணிக்க வாசகர் உற்சவம், திருவூடால், திருவாதிரை உற்சவம், தை மாதத்தில் தை கிருத்திகை முருகப்பெருமனுக்கு உற்சவம், பங்குனி மாத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம்.