இக்கோவிலில் 60வது சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படுகிறது. விழாவை முன்னிட்டு இன்று காலை 8:30 மணிக்கு, கணபதி ேஹாமத்துடன் பூஜை துவங்கியது. தொடர்ந்து, சுவாமிக்கு சம்வஸ்த்தரா அபிேஷகமும், 108 சங்காபிேஷகமும் நடந்தது. தொடர்ந்து, இன்று 29ம் தேதி மாலை 6:00 மணிக்கு விளக்கு பூஜையும், நாளை 30ம் தேதி இரவு 7:30 மணிக்கு கலச ஸ்தாபனம் நடக்கிறது. மே 1ம் தேதி, சித்ரா பவுர்ணமியையொட்டி, அதிகாலை 4:00 மணிக்கு 108 பால் காவடிகளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார ஆராதனை நடக்கிறது. 6:00 மணிக்கு 108 பால் காவடிகள் வீதியுலா நடக்கிறது. பின், சிவசண்முகனுக்கு பால் அபிேஷகம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. 2ம் தேதி இரவு 7:00 மணிக்கு இடும்பன் பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை, செயல் அலுவலர் சிவப்பிரகாசம், அறங்காவலர் வேலவன் ஆகியோர் செய்து வருகின்றனர்.