பழநி ரெணகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
பதிவு செய்த நாள்
30
ஏப் 2026 04:04
பழநி: பழநி ரெணகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை நடந்தது பழநி ரெணகாளியம்மன் கோயில் புது தாராபுரம் சாலையில் உள்ளது. 2025,ஆக.,ல் பாலாலயம் நடந்தது. ஏப்.12ல் முகூர்த்த கால் நாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. ஏப்.27., மாலை 6:00 மணிக்கு மேல் விநாயகர் பூஜை, இறைஅனுமதி பெறுதலில் துவங்கிய கும்பாபிஷேக பூஜைகள் ஏப்.28., மாலை முதற்கால யாக பூஜை நடைபெற்றது. ஏப்.29., காலை இரண்டாம் கால யாக பூஜை, மாலை மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. இன்று (ஏப்.30.,) காலை 7:35 மணிக்கு மேல் நான்காம் கால யாக பூஜை நடைபெற்று, காலை 9:30 மணிக்கு யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கலசங்கள் எடுத்து வரப்பட்டது. அதன் பின் ரெணகாளியம்மன் கோயில், மற்றும் பரிவார தெய்வங்களான கன்னிமூல விநாயகர், ரெணகருப்பன் சுவாமி சன்னதிகளில் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று பக்தர்களுக்கு, பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் நடந்தது நாளை (மே.1)சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தில் கோயில் நிர்வாகி செல்வராஜ், பழனிஸ்டில்ஸ் உரிமையாளர் ரஞ்சித் குமார், ஸ்ரீ வேலன் டயர்ஸ் வினோத், ஸ்ரீ வேலன் ஆட்டோஸ் விவேக், சாய் கிருஷ்ணா மகளிர் மருத்துவமனை, அரிமா சங்க திண்டுக்கல், தேனி ஒருங்கிணைப்பாளர் சுப்புராஜ், பழநி நகராட்சி முன்னாள் உறுப்பினர் தங்கராஜ், கோவை சூர்யா பேக்கரி சுப்பிரமணி, பழநி தங்கரத அரிமா சங்க பட்டய தலைவர் மனோகரன், பழநி, நகராட்சி ஏழாவது வார்டு கவுன்சிலர் சுரேஷ், குபேரன் பைனான்ஸ் சிவா, பழநி நேஷனல் ரவி ஸ்டுடியோ ரவி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
|