விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரி உடனுறை ஆதிசக்தீஸ்வரர் கோவிலில், சித்திரை மாத தேரோட்ட விழா, கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, இன்று காலை 8:00 மணிக்குமேல், 9:30 மணிக்குள் தேரோட்டம் விமர்சையாக நடந்தது. ஊர் முக்கியஸ்தர்கள், கிராம மக்கள் திரளாக வடம்பிடித்து, தேரோடும் வீதிகளில் இழுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர், மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இன்று மதியம் 12:00 மணிக்கு மேல், தீர்த்தகுளத்தில் சுவாமிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. நாளை தெப்பல் உற்சவத்துடன் சித்திரை விழா நிறைவு பெறுகிறது.