Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குழந்தை வரம் அளிக்கும் வேணுகோபால ... மகிஷாசூரனை பக்தர்கள் வழிபடும் அதிசய ...
முதல் பக்கம் » துளிகள்
5 முகங்கள் கொண்ட சிவன் சிலை துமகூரின் பசுபதிநாத் கோவில்
எழுத்தின் அளவு:
5 முகங்கள் கொண்ட சிவன் சிலை துமகூரின் பசுபதிநாத் கோவில்

பதிவு செய்த நாள்

03 மே
2026
11:05

பெங்களூருக்கு அருகில் அமைந்துள்ள துமகூரு டவுன் பட்டவாடி பகுதியில் ஏ.பி.எம்.சி., எனும் வேளாண் விளைபொருள் விற்பனை சந்தை உள்ளது. இந்த சந்தைக்குள் 100 ஆண்டு பழமையான பசுபதிநாத் கோவில் உள்ளது. சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ள இந்த கோவிலின் விசேஷம் என்னவென்றால், கருவறைக்குள் ஐந்து முகங்கள் கொண்ட சிவன் சிலை அமைந்து உள்ளது.

நேபாள நாட்டின் காத்மாண்டில் உள்ள பசுபதிநாத் கோவிலிலும், இந்த கோவிலிலும் தான் ஐந்து முகங்கள் கொண்ட சிவன் சிலை இருப்பது சிறப்பம்சமாக உள்ளது. ஐந்து சிலைகளுக்கு வாமதேவா, சத்துவஜா, அஹோரா, சத்புருஷா, ஈசனியா என்ற பெயர்கள் உள்ளன.

இக்கோவிலுக்கு வந்து சிவனை தரிசித்து சென்றால், திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகள் நீங்கும்; திருமணம் நடக்காமல் இருப்போருக்கு சீக்கிரம் திருமணம் ஆகும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

கோவிலில் நாகதேவதை ரூபத்தில் சுப்பிரமணியர், கணபதி உட்படசில சுவாமிசிலைகளும் உள்ளன. கோவில் சிறியதாக இருந்தாலும், அமைதியான சூழல் பக்தர்களை கவர்ந்து இழுக்கிறது.

ஐந்து வாரம் தொடர்ந்து திங்கள்கிழமை கோவிலுக்கு சென்று, சிவன் பாதத்தில் வில்வ இலை வைத்து பூஜித்தால், உடல்நல பிரச்னைகள் பறந்து போகும் என்றும் பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை காலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை ருத்ராபிஷேகம்; செவ்வாய் கிழமைகளில் பார்வதிதேவிக்கு சிறப்பு பூஜைகள்; சங்கடஹரசதுர்த்தி அன்று தீப பூஜை செய்கின்றனர்.

தினமும் காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரையும்; மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும். துமகூரு டவுனை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பாவகடா, குப்பி, குனிகல், ஹாசன், பெங்களூரின் பல இடங்களில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஹாசன் மாவட்டம், நவிலே கிராமத்தில் 12ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட ஸ்ரீ நாகேஸ்வரா சுவாமி கோவில் அமைந்து ... மேலும்
 
ஹிந்து புராணங்களின்படி மகிஷாசூரன் என்பவர் சக்தி வாய்ந்த அசுரனாக பார்க்கப்படுகிறார். பாதி ... மேலும்
 
temple news
சிக்கமகளூரு என்றால், இயற்கை அழகு கொட்டி கிடக்கும் மாவட்டம். சிக்கமகளூரு பெயரை கேட்டாலே மலைகள், இயற்கை ... மேலும்
 
temple news
பொதுவாக ஒரு கோவிலுக்கு சென்றால், ஒன்று அல்லது இரண்டு கடவுள்களை தரிசிக்கலாம். ஆனால் மைசூரில் உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar