பதிவு செய்த நாள்
19
ஜன
2013
11:01
பழநி: தை மாத முதல் முகூர்த்த தினத்தை முன்னிட்டு, பழநியில் திருஆவினன்குடி கோயில், மற்றும் அடிவார பகுதியில் உள்ள தனியார் மண்டபங்களில் திருமணங்கள் நடந்தது. மலைக்கோயிலில் புதுமண தம்பதியர் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.நேற்று தைமாதம் முதல் முகூர்த்தம் என்பதால், பழநியில் அனைத்து திருமண மண்டபங்களிலும் "ஹவுஸ் புல்"லாக காணப்பட்டது. முருகப்பெருமானின் மூன்றாம் படைவீடான திருஆவினன்குடி கோயிலிலும் ஏராளமான திருமணங்கள் நடந்தது.
பாதிப்பு: முகூர்த்த தினம் என்பதால் கோயிலுக்கு முக்கிய வீதிகளான அடிவாரம், அய்யம் புள்ளி ரோடு, பூங்கா ரோடு, சன்னதிவீதி வையாபுரி குளத்துரோடு, அருள் ஜோதி வீதி, கிரிவீதி பாதைகளில் வாகனங்கள், பாதயாத்திரை பக்தர்கள் கூட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருஆவினன்குடி, பூங்காரோடு பகுதிகளில் வழக்கத்திற்கும் கூடுதலான வாகனங்கள், ரோட்டின் இருபுறங்களிலும் நிறுத்தி இருந்தனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போதிய போலீசார் இல்லாததால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.