கருட வாகனத்தில் இரட்டைக் குடையுடன் பெருமாள் உலா; வைகையில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2026 07:06
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த விழாவில் இரட்டை குடையுடன் கருட வாகனத்தில் பெருமாள் வைகையில் உலா வந்தார்.
எமனேஸ்வரம் பெருந்தேவி தயார் வரதராஜ பெருமாள் கோயில் 119வது வைகாசி வசந்த விழா நடக்கிறது. பெருமாள் வைகை ஆற்றில் கள்ளழகர் திருக்கோலத்தில் இறங்கி தினமும் பல்வேறு வாகனங்களில் அருள்பாலிக்கிறார். நேற்று முன்தினம் இரவு கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள் மண்டகப்படிகளில் சேவை சாதித்தார். பின்னர் இரவு அவதார சேவையில் அருள்பாலித்த நிலையில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று அனுமார் வாகனத்தில் ராமாவதாரத்தில் வீற்றிருந்தார். இன்று காலை சிறப்பு அபிஷேகம் நடந்து, இரவு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கலைந்த மாலையுடன் கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளுவார். இரவு முழுவதும் வீதிகளில் உலா வந்து நாளை காலை திருக்கோயிலை அடைகிறார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபையினர் செய்துள்ளனர்.