பதிவு செய்த நாள்
04
பிப்
2013
10:02
விருதுநகர்: முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு நாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் 13 கோயில்களில் சமபந்தி விருந்து நடந்தது. சொக்கநாதர் சுவாமி கோயிலில் நடந்த சமபந்தியில் கலெக்டர் ஹரிஹரன் கலந்து கொண்டார். விருதுநகர் மாவட்டத்தில் இருக்கன்குடி மாரியம்மன் கோயில், சிவகாசி விஸ்வநாதர் சுவாமி கோயில், வெங்கடாஜலபதி கோயில், திருத்தங்கல் திருநின்ற நாராயண பெருமாள் கோயில், ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில், பழனியாண்டவர் கோயில், அருப்புக்கோட்டை மாகாளியம்மன் கோயில், நவநீத பாலகிருஷ்ணன் கோயில், பாம்பாலம்மன் கோயில், காரியாபட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில், தோணுகால் வெயிலுகந்தம்மன் கோயில், தளவாய்புரம் பத்திரகாளியம்மன் கோயில், விருதுநகர் சொக்கநாதர் கோயில்களில் சமபந்தி விருந்து நடந்தது. இதில் விருதுநகர் சொக்கநாதர் கோயிலில் நடந்த சமபந்தி விருந்தில் கலெக்டர் ஹரிஹரன் கலந்து கொண்டார். இதில் விருதுநகர் ஒன்றிய தலைவர் கலாநிதி, நகராட்சி துணை தலைவர் மாரியப்பன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதாபிரியதர்ஷினி, மாரியப்பன் பி.ஆர்.ஓ., உட்பட பலர் கலந்து கொண்டனர்.