Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  சபரிமலை அருகே தாழ்வாக பறந்த ... கோயில்களில் முகூர்த்த நாள் கூட்டம் கோயில்களில் முகூர்த்த நாள் கூட்டம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாம்பரநாதர் கோவிலில் அன்னப்பாவாடை காட்சி
எழுத்தின் அளவு:
ஏகாம்பரநாதர் கோவிலில் அன்னப்பாவாடை காட்சி

பதிவு செய்த நாள்

24 ஆக
2026
10:08

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், அன்னப்பாவாடை நிறைமணி காட்சி, நேற்று நடந்தது.

இறைவனால் படைக்கப்பட்ட காய்கறிகள், பழவகைகள், தானியங்கள் உள்ளிட்டவற்றை இறைவனுக்கே அன்போடு படையலிடப்படுவதை அன்னப்பாவாடை நிறைமணி காட்சி என அழைக்கப்படுகிறது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் மூல நட்சத்திர தினத்தன்று, அன்னப்பாவாடை நிறைமணி காட்சி நடைபெறும். அதன்படி நேற்று காலை 10:00 மணிக்கு, சிறப்பு அன்னப்பாவாடை நிறைமணி காட்சி நடந்தது.

இதில், மூலவர் சன்னிதியில், அனைத்து வகையான பழங்கள் மற்றும் காய்கறிகள் மூலம் தோரணங்கள் கட்டப்பட்டு, புளியோதரை, தயிர் சாதம், சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், எலுமிச்சை சாதம் உள்ளிட்ட சித்ரான்னங்கள் சுவாமிக்கு படையலிடப்பட்டது.

பவித்ர உத்சவம் காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில் ஏழு நாட்கள் நடைபெறும் பவித்ர உத்சவம், கடந்த 20ம் தேதி இரவு 7:30 மணிக்கு தொடங்கியது.

இதில், உத்சவர் விநாயக பெருமான், சன்னிதி தெருவில் உள்ள அரசு காத்த அம்மன் கோவில் வரை வீதியுலா சென்றார். கடந்த 21ம் தேதி முதல், நாளை மறுநாள் வரை, தினமும் இரவு 7:30 மணிக்கு ஏலவார்குழலியுடன், மலர் அலங்காரத்தில் எழுந்தருளும், ஏகாம்பரநாதர் அரசு காத்த அம்மன்கோவில் வரை வீதியுலா செல்கிறார்.

அதன்படி, நான்காவது நாளான நேற்று, சுவாமி வீதியுலா நடந்தது.

பவித்ர உத்சவம் நிறைவு நாளான வரும் 26ம் தேதி இரவு 7:30 மணிக்கு மஹா பூர்ணாஹூதி எனப்படும் மஹா நிறைவு வேள்வியும், மூலவருக்கு யாக சாலையில் பூஜை செய்த பவித்ரம் சமர்ப்பணம் செய்யப் படுகிறது.

தொடர்ந்து ஏலவார்குழலியுடன், மலர் அலங்காரத்தில் எழுந்தருளும் ஏகாம்பர நாதர், நான்கு ராஜவீதிகளிலும் பவனி வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவெண்ணெய்நல்லூர்; திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பிட்டுக்கு மண் சுமந்த ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அடுத்த ஆசூரில் ஆஞ்சநேயர் சிலைக்கு கும்பாபிஷேகம் விழா நடந்தது.ஆசூர் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவின் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஒரே நாளில் 416 திருமணங்கள் நடைபெற்று ... மேலும்
 
temple news
வடலூர்; வடலூர் சபையில் புதிய கொடி மரம் நடும் நிகழ்வு நடந்ததுகடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அக்கரைவட்டம் சித்தானந்த சுவாமியின் மகாகுரு பூஜைவில் ஏராளமாக பக்தர்கள் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar