பதிவு செய்த நாள்
05
பிப்
2013
11:02
திருத்தணி: தெக்களூர் புனித பாத்திமா அன்னை கோவிலில், சிறப்பு பிரார்த்தனை மற்றும் குடும்ப விழா நடைபெற்றது. திருத்தணி ஒன்றியம், தெக்களூர் கிராமத்தில் அமைந்து உள்ளது புனித பாத்திமா அன்னை கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும், குடும்ப விழா நடத்தப்பட்டு, பல்வேறு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. அதேபோல், நேற்று முன்தினம் இரவு கோவில் வளாகத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் குடும்ப விழா ஆலய தந்தை விக்னேஷ் தாமஸ் தலைமையில் நடந்தது. ஆடம்பர திருப்பளி தந்தை ஜோம்ஸ் கிளிட்டஸ் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையை துவக்கி வைத்தார். தொடர்ந்து, அங்கு வந்திருந்த கிறிஸ்துவர்கள் இடையே, நான்கு குழுக்களாக பிரித்து, நாடகம், நடனம், பாட்டு, கவிதை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டன.