Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரியமாரியம்மன் கோவில் 5,004 தீபஜோதி ... திருக்கல்யாண உற்சவம்: முசிறியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பவானி கோவில் யானை பராமரிப்புக்கு உண்டியல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2013
11:02

ஈரோடு: பவானி சங்கமேஸ்வரர் கோவில் யானையை பராமரிக்க உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம் பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், 1980ம் ஆண்டு முதல் வேதநாயகி என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. சங்கமேஸ்வரர் கோவிலில் தேர் உற்சவம், உற்சவர் புறப்பாடு, அமாவாசை, கிருத்திகை உள்ளிட்ட சிறப்பு தினங்களின்போது, வேதநாயகியை கொண்டு இறைவழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.வேத நாயகிக்கு தினமும் காலை நல்லெண்ணெய், மிளகு கலந்து மூன்று கிலோ பொங்கலும், மாலை, 3 மணிக்கு பச்சை பயிறு, கொள்ளும் கலந்த கலவையாக, மூன்று கிலோ உணவும், 70 கட்டு தட்டும் உணவாக வழங்கப்பட்டு வருகிறது.சில மாதத்துக்கு முன் கால், உடலின் பின்புறம் ஏற்பட்ட புண்ணால் அவதிப்பட்ட வேதநாயகி, புத்துணர்வு முகாமுக்கு பின், புத்துணர்ச்சியோடு, சங்கமேஸ்வரர் கோவிலுக்கு திரும்பியது. இந்நிலையில், நன்கொடையாளர்கள் வழங்கும் நிதி, அரசு ஒதுக்கும் நிதி ஆகியவற்றின் மூலம், வேதநாயகியை அதிகாரிகள் பராமரித்து வந்தனர். நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்பதால், சங்கமேஸ்வரர் கோவிலில் யானை பராமரிப்பு உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், 30 ஆண்டுக்கும் மேலாக வேதநாயகி என்ற யானை பராமரிக்கப்படுகிறது. அரசு நிதி, நன்கொடையாளர்கள் வழங்கும் நிதி, யானையை பராமரிக்க போதுமானதாக இல்லை. புத்துணர்வு முகாமின் போது, வேதநாயகிக்கு சத்தான ஆகாரங்களும், திரவ உணவுகளையும் அதிகம் வழங்க அறிவுறுத்தப்பட்டது.எனவே, சங்கமேஸ்வரர் கோவிலில், யானை பராமரிப்பு உண்டியல் வைத்து, அதன் மூலம் வரும் காணிக்கையை கொண்டு, வேதநாயகியை பராமரிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி, யானை பராமரிப்பு உண்டியல் வைக்கப்பட்டது.அதிகாரிகள் முன்னிலையில் மற்ற உண்டியல் திறப்பின் போது, யானை பராமரிப்பு உண்டியலும் திறக்கப்படும். உண்டியல் மூலம் கிடைக்கும் தொகை முழுவதுமே, வேதநாயகிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 
temple news
பாஞ்சராத்திர தீபம் என்பது மகாவிஷ்ணு ஜோதி வடிவமாகத் தோன்றி, உலகைக் காத்த நாளைக் குறிக்கும் ஒரு தீப ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக் கோவிலில், நேற்று, கார்த்திகை மாத கிருத்திகை விழாவை ஒட்டி, அதிகாலை, 4:30 ... மேலும்
 
temple news
தேனி: தேனி மாவட்டத்தில் சிவன், முருகன் கோயில்களில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் மலை உச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar