Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவம் என்றால் மங்கலம்: ஆற்றல் தரும் ... பகவான் யோகி ராம்சுரத்குமார் குருமகராஜின் ஆராதனை விழா! பகவான் யோகி ராம்சுரத்குமார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குழுமாயி கோவிலில் குட்டிக்குடி விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 மார்
2013
10:03

திருச்சி: புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில், பிரசித்திப்பெற்ற, குட்டிக்குடி திருவிழாவில், பலி கொடுக்கப்பட்ட, நூற்றுக்கணக்கான ஆடுகளின் ரத்தத்தை மருளாளி குடித்தார். திருச்சி உய்யக்கொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆகிய, மூன்று ஆறுகள் சங்கமிக்கும், ஆறுகண் கலிங்கி அருகே, புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும், "குட்டிக்குடித்தல் திருவிழா பிரசித்திப்பெற்றது. நடப்பாண்டு திருவிழா, கடந்த, 20ம் தேதி காப்பு கட்டுதல் வைபவத்துடன் துவங்கியது. கடந்த, 5ம் தேதி இரவு, காளி ஓட்டத்தையொட்டி, வண்ணாரப்பேட்டையிலிருந்து தப்பு, தாரை, தப்பட்டையுடன் ஊர்வலமாக புறப்பட்டு, நள்ளிரவில் அம்மனை அழைத்து வந்து பதுவு கோவிலில் வைத்தனர். அதைத்தொடர்ந்து, அம்மன் காளி ஓட்டமாக, தென்னை ஓலை, வெட்டிவேர் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், நேற்று முன்தினம் இரவு, வீதியுலா வந்தார். உறையூர், புத்தூர், தென்னூர் பகுதியில் வீதி, வீதியாக உலா வந்த அம்மனுக்கு சுத்தபூஜை என்பதால், வீடுகள் தோறும், தேங்காய், பழம் வைத்து பூஜை செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான, "குட்டிக்குடித்தல் வைபவம், நேற்று காலை புத்தூர் மந்தையில் நடந்தது. காளி ஓட்டமாக வந்த அம்மனின் முன்னிலையில், தாரை, தப்பட்டை, உடுக்கு அடித்து மருளாளிக்கு அருள் வர வைத்தனர்.

அரசு சார்பில் ஆடு: புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலுக்கு, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்தே, குட்டிக்குடித்தல் திருவிழாவுக்கு அரசு சார்பில் ஆடு வழங்குவது வழக்கமாக இருக்கிறது. தற்போது வரை இவ்வழக்கம் நடைமுறையில் உள்ளது. தற்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வழங்கப்படும் ஆடுகள் முதலில் பலியிடப்பட்டன. மருளாளி சிவக்குமார், அருள் வந்து, பலி கொடுத்த ஆடுகளின் ரத்தத்தை குடித்தார். நூற்றுக்கணக்கான ஆடுகளின் ரத்தத்தை, மருளாளி ஆவேசமாக குடிப்பது, காண்போரின் ரத்தத்தை உறைய வைத்தது. நூற்றுக்கணக்கான ஆடுகள் வெட்டப்பட்டதால், அப்பகுதி முழுவதும் ரத்த சகதியாக காட்சியளித்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மந்தையில் திரண்டதால், உறையூர், புத்தூர், தென்னூர் பகுதிகளில், ராட்டினம், சாலையோர கடைகள் என திருவிழா கோலம் பூண்டன. தொடர்ந்து, இன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு வைபவமும், நாளை குடிபுகுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar