Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கண்டமானடி கோயிலில் மகா சிவராத்திரி ... கோயில்களில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காமாட்சியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் அக்னிச்சட்டி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2013
10:03

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில், மாசி மகா சிவராத்திரி விழாவில் ,நேற்று பக்தர்கள் அக்னிச் சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மஞ்சளாற்றில் அமைந்துள்ளது. மூலஸ்தானம் என்னும் குச்சுவீட்டின் கதவுகள் எப்போதுமே திறக்கப்படுவது இல்லை. அடைக்கப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. இரவு, பகலாக அணையா நெய்விளக்கு எரிகிறது. பல்வேறு சிறப்புக்களை கொண்ட இக்கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது. தொடர்ந்து ஒரு வாரம் நடைபெறும். மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கானக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.சிரமம் இன்றி அம்மன் தரிசனம்: கடந்த காலங்களில் கோயிலின் நுழைவு பகுதியில் தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதனால் கூட்ட நெரிசல் ஏற்படும். தற்போது பொது தரிசனம், கட்டண தரிசனம் மற்றும் வி.ஐ.பி.,தரிசனம், என தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. கோயில் நுழைவுப்பகுதியில் பக்தர்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், எவ்வித சிரமமும் இல்லாமல் பக்தர்கள் கோயில் நுழைவுப் பகுதியில் வந்ததும் நேராக அம்மனை தரிசனம் செய்யலாம். எவ்வளவு பக்தர்கள் கூட்டம் வந்தாலும் விரைவாக அம்மன் தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மஞ்சளாறு அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆற்றில் குளிப்பதற்கு பள்ளம் ஏற்படுத்தியுள்ளனர். உடை மாற்றுவதற்கு தற்காலிக செட் அமைக்கப்பட்டுள்ளது. நேர்த்திக்கடன்: நேற்று காலையில் இருந்து பிள்ளையார் கோயில் எதிரில் உள்ள மஞ்சளாற்றங்கரையில் இருந்து, பக்தர்கள் அக்னி சட்டியில் தீ மூட்டி அங்கிருந்து எடுத்து அம்மன் சன்னதிக்கு கொண்டு வந்து செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி காவிரி துலாக் கட்டத்தில் ஆதீனங்கள் உள்ளிட்ட ... மேலும்
 
temple news
அரியலூர் ; ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலய கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் துலா உற்சவத்தையொட்டி திருத்தேரோட்டம்; கொட்டும் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை ... மேலும்
 
temple news
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நுாற்றாண்டு விழா தற்போது அனைத்து பகுதி யிலும் சிறப்பான முறையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar