Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகா சிவராத்திரி விழா 54 சிவலிங்கம் ... அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காவேரிபட்டணத்தில் மயானக்கொள்ளை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2013
10:03

காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அங்காளம்மன், பூங்காவனத்து அம்மன் கோவிலில் நடந்த மயான கொள்ளை விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
காவேரிப்பட்டணம் பன்னீர்செல்வம் தெரு அங்காளம்மன் கோவில், தாம்சன் பேட்டை பூங்காவனத்து அம்மன் கோவில்களில் மயான கொள்ளை விழா கடந்த, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று அதிகாலை முகவெட்டு நிகழ்ச்சியும், காலை, 6 மணிக்கு ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் அலகுகள் குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். பக்தர்கள் சிலர் முதுகில் அலகு குத்திக்கொண்டு ஆட்டோ, டிராக்டர், கார் போன்ற வாகனங்களை இழுத்து சென்றனர். மதியம், 2 மணிக்கு எருதுகள் பூட்டிய அலங்கரிக்கப்பட்ட தேரில் அங்காளம்மன், பூங்காவனத்து அம்மன் மயான புறப்படுதல் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்ற அம்மனுக்கு பஸ் ஸ்டாண்ட் அருகே பக்தர்கள் முதுகில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி சென்று அம்மனுக்கு பூஜை செய்த காட்சி பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து தென்பெண்ணை ஆற்றங்கரையில் நடந்த மயான கொள்ளை விழாவில், பேய் ஓட்டும் நிகழ்ச்சி நடந்தது. இரவில் வாணவேடிக்கை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஓசூர், பெங்களூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர் உட்பட பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் அன்னதானம் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது.
* தர்மபுரி வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில், எஸ்.வி., ரோடு அங்காளம்மன் கோவில்களில்யான கொள்ளை திருவிழா கடந்த, 3ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நாளான நேற்று அதிகாலை முகவெட்டு நிகழ்ச்சியும், 10 மணிக்கு பூத வாகனத்தில் அம்மன் மயான புறப்பாடும் நடந்தது. பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம் வரை மயானத்தில் மயான கொள்ளை விழா நடந்தது.
மாலை 3 மணிக்கு மயானத்திலிருந்து அம்மன் புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* தர்மபுரி குமாரசாமிப்பேட்டை அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு ஸ்வாமி திருக்கல்யாணம் வைபவமும், நேற்று அதிகாலை முகவெட்டுதலும், மதியம், 12 மணிக்கு பூத வாகனத்தில் அம்மன் மயான புறப்பாடும் நடந்தது. அம்மன் தேர் முன்பு பக்தர்கள் அலகு குத்திக்கொண்டும், ஆகாய காவடியில் ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
* பென்னாகரம் பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் நடந்த மயான கொள்ளை திருவிழாவில் பக்தர்கள் பல்வேறு அலகு குத்திக்கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar