Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் தெப்ப உற்சவம்! கொண்டத்துக் காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா! கொண்டத்துக் காளியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பங்குனி மாத சேர்த்தி ஸேவை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 மார்
2013
10:03

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுக்கொரு முறை மட்டுமே நடக்கும் சேர்த்தி ஸேவையில், நம்பெருமாளும், தாயாரும் சேர்ந்து பக்தர்களுக்கு ஸேவை சாதித்தனர். பூலோக வைகுண்டமான, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ஆதி பிரம்மோற்ஸவம் என்றழைக்கப்படும் பங்குனி தேர் திருவிழா கடந்த, 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் நம்பெருமாள் பல்வேறு வகையான வாகனங்களில் எழுந்தருளி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் மண்டகப்படிகள் பெற்றார்.

நாச்சியாருடன் ஸேவை: ஸ்ரீரங்கம் சார்பு கோவிலான, உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில், 108 திவ்ய தேசங்களில் இரண்டாமிடத்தை பெறக்கூடிய சிறப்புக்குரியது. ஸ்ரீரங்கம் உற்சவரே, இக்கோவிலுக்கும் உற்சவராக இருக்கிறார். கடந்த, 23ம் தேதி, நாச்சியாரின் ஜென்ம (பிறந்த) நட்சத்திரமான பங்குனி ஆயில்யத்தன்று, ஸ்ரீரங்கத்திலிருந்து உறையூர் புறப்பட்ட நம்பெருமாள், நாச்சியாருடன் திருமணக்கோலத்தில் சேர்த்தி ஸேவை சாதித்தார். அப்போது தான் அணிந்திருந்த கணையாழியை நாச்சியாரிடம் கொடுத்ததாராம். அதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் திரும்பிய நம்பெருமாள், நெல் அளவை கண்டருளினார். தாயார் சன்னதியில் திருமஞ்சனமும் நடந்தது. நம்பெருமாளின் கணையாழியை காணாமல் திகைத்த தாயார், நம்பெருமாளிடம் கேட்டபோது, கொள்ளிடம் ஆற்றில் காணாமல் போனதாக பொய்யுரைத்தாராம். அதையடுத்து, தங்கக்குதிரையில் எழுந்தருளிய நம்பெருமாள் கொள்ளிடக்கரை முழுவதும் கணையாழியை தேடிவிட்டு(!), சித்திரை வீதியில் வையாளி கண்டருளினார். வெறுங்கையுடன் திரும்பிய நம்பெருமாளிடம் தாயார் ஊடல் கொண்டார். இதனால் நேற்று மதியம், பிரணயகலகம் எனப்படும் தாயார், நம்பெருமாளை மட்டையால் அடித்த மட்டையடி உற்சவம் நடந்தது. மூலஸ்தானம் திரும்பிய நம்பெருமாள், தாயாரும், சர்வ அலங்காரத்தில், "கத்யத்ரய மண்டபம் எனப்படும் சேர்த்தி மண்டபத்தில் மாலை ஸேவை சாதித்தனர். "நம்பெருமாளும், தாயாரும் ஒன்றாக ஸேவை சாதிப்பதால், ஸ்ரீரங்கமே பூலோக வைகுண்டமாகும் என்ற ஐதீகத்தினால், நள்ளிரவு வரை தொடர்ந்து நடந்த சேர்த்தி ஸேவையை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸேவித்து பரவசமடைந்தனர். இன்று தேர்: விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி தேரோட்டம் இன்று காலை, 6.30 மணிக்கு நடக்கிறது. 28ம் தேதி நடக்கும் ஆளும் பல்லக்கு விழாவுடன் தேரோட்ட திருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புனித சவான் மாதம் இரண்டாம் சோமவாரத்தை முன்னிட்டு, சிவ தரிசனம் செய்ய இராமேஸ்வரம், வாரணாசி, அயோத்தி ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் ஆடி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிஆண்டாள் சந்நிதி உள்ளது. இங்கு ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருமங்கலம்; கள்ளிக்குடி தாலுகா செங்கப்படை கோயிலில் 68 ஆண்டுகளாக அணையாமல் தொடர்ந்து விளக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar