Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ... பங்குனி உத்திரம் மகோற்சவம்: சுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாணம்! பங்குனி உத்திரம் மகோற்சவம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொண்டத்துக் காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 மார்
2013
11:03

அனுப்பர்பாளையம்: பெருமாநல்லூர் கொண்டத்துக் காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா நேற்று காலை நடந்தது; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் கொண்டத்துக் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குண்டம் தேர்த்திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று அதிகாலை 2.00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, பெருமாநல்லூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் பொங்கல் வைத்து, படைகலன் கொண்டு வரப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் அம்மை அழைக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. தலைமை பூசாரிகள் கன்னியப்பன், விநாயகமூர்த்தி ஆகியோர் குண்டம் இறங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மஞ்சள் உடை உடுத்திய பக்தர்கள், மஞ்சள் கிணற்றில் குளித்து, வரிசையாக குண்டம் இறங்கினர். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காலை 8.00 மணிக்கு குண்டம் மூடுதல், சிறப்பு அக்னி அபிஷேகம், அபிஷேக தீபாராதனை, அம்மன் பூதவாகன காட்சியுடன் புறப்படுதல். மதியம் 2.00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜை, அம்மன் சிங்க வாகனத்தில் திருத்தேர் எழுந்தருளும் நிகழ்ச்சி, 4.00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. குண்டம் இறங்கும் நிகழ்ச்சி முடிந்ததும், பக்தர்கள் வேண்டுதலுக்காக, குண்டம் அமைக்கப்பட்ட இடத்தில் உப்பு, மிளகு போடுதல் மற்றும் பொங்கல் வைத்தல், மொட்டை போடுதல், கரும்பு படைத்தல் போன்ற நிகழ்ச்சியை செய்தனர். விழாவுக்கு பெருமாநல்லூரை சுற்றியுள்ள ஊர் களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அவிநாசி டி.எஸ்.பி., ரங்கசாமி தலைமையில் எட்டு இன்ஸ்பெக்டர்கள், 15 எஸ்.ஐ.,க்கள், 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைக் கார்த்திகை, தெப்பம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: தை கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar