Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ... பங்குனி உத்திரம் மகோற்சவம்: சுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாணம்! பங்குனி உத்திரம் மகோற்சவம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொண்டத்துக் காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 மார்
2013
11:03

அனுப்பர்பாளையம்: பெருமாநல்லூர் கொண்டத்துக் காளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா நேற்று காலை நடந்தது; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரில் கொண்டத்துக் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குண்டம் தேர்த்திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று அதிகாலை 2.00 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, பெருமாநல்லூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் பொங்கல் வைத்து, படைகலன் கொண்டு வரப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் அம்மை அழைக்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. தலைமை பூசாரிகள் கன்னியப்பன், விநாயகமூர்த்தி ஆகியோர் குண்டம் இறங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மஞ்சள் உடை உடுத்திய பக்தர்கள், மஞ்சள் கிணற்றில் குளித்து, வரிசையாக குண்டம் இறங்கினர். அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காலை 8.00 மணிக்கு குண்டம் மூடுதல், சிறப்பு அக்னி அபிஷேகம், அபிஷேக தீபாராதனை, அம்மன் பூதவாகன காட்சியுடன் புறப்படுதல். மதியம் 2.00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜை, அம்மன் சிங்க வாகனத்தில் திருத்தேர் எழுந்தருளும் நிகழ்ச்சி, 4.00 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. குண்டம் இறங்கும் நிகழ்ச்சி முடிந்ததும், பக்தர்கள் வேண்டுதலுக்காக, குண்டம் அமைக்கப்பட்ட இடத்தில் உப்பு, மிளகு போடுதல் மற்றும் பொங்கல் வைத்தல், மொட்டை போடுதல், கரும்பு படைத்தல் போன்ற நிகழ்ச்சியை செய்தனர். விழாவுக்கு பெருமாநல்லூரை சுற்றியுள்ள ஊர் களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அவர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அவிநாசி டி.எஸ்.பி., ரங்கசாமி தலைமையில் எட்டு இன்ஸ்பெக்டர்கள், 15 எஸ்.ஐ.,க்கள், 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம்  அருகே உள்ள ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் மறுபூஜையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திங்கள்கிழமை திருமலையில் பல்லவோத்ஸவம் கொண்டாடப்பட்டது. மைசூர் மகாராஜாவின் பிறந்தநாளை ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவத்தில் உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple news
தாலி பாக்கியத்திற்காக சுமங்கலிகள் ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar