Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருமாரியம்மன் கோவில் சித்திரை ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2013
10:04

புதுக்கோட்டை: நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று பகல் 1.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்களில் ஒன்று நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில். நாரதர் தவம் இருந்து அம்பாளை வழிபட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனித்திருவிழா 10 நாட்கள் கோலாகலத்துடன் நடப்பது வழக்கம். இந்தாண்டு திருவிழா கடந்த 31ம் தேதி திருக்கொடியேற்றுடன் ஆரம்பமாகியது. விழாவின் ஒவ்வொரு நாளும் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள், அம்மன் வீதியுலா வருதல், அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று பகல் 1.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது. சர்வ அலங்காரத்துடன் அம்மன் திருத்தேரில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தேர் திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்ய உள்ளனர். இதுபோன்று காவடி எடுத்தும், அலகுகள் குத்தியும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் நிறைவு செய்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக புதுக்கோட்டை மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், புதுக்கோட்டை, கீரனூர், அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை, திருமயம், பொன்னமராவதி ஆகிய பகுதிகளிலிருந்து நார்த்தாமலைக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக கோவிலைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர், விழா கமிட்டியினர், மண்டகபடிதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
 பழநி; பழநி கோயிலில் ஆடி மாத கார்த்திகை, மற்றும் விடுமுறை நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழநி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு ... மேலும்
 
temple news
திண்டிவனம்; திண்டிவனம் கிடங்கல் பகுதியில் ஆடிகிருத்திகையை முன்னிட்டு, பக்தர்களுக்கு மிளகாய் பொடி ... மேலும்
 
temple news
கோவை; ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி கோவிலில் மாதம் தோறும் நடைபெறும் மகா ருத்ர யக்ஞம் நடந்தது. இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar