Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பண்பொழி திருமலைக்குமாரசுவாமி ... தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகும் தமிழக கோவில்கள்! தமிழ் புத்தாண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாள்குளம் பெருமாள் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஏப்
2013
10:04

பேய்க்குளம், ஏப்.8- பேய்க்குளம் அருகே பெருமாள்குளம் ஸ்ரீ பெருமாள் சுவாமி கோயிலில் கொடைவிழாவையொட்டி 8ம் ஆண்டு 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.பேய்க்குளம் அருகேயுள்ள பெருமாள்குளம் ஸ்ரீ பெருமாள் சுவாமி கோயிலில் கொடை விழா துவங்கியது. தொடர்ந்து இக்கோவில் கொடைவிழா 10ஆம் தேதி வரை 6 நாள்கள் நடக்கிறது. முதல் நாள் (5ம் தேதி) காலை கும்பாபிஷேகம், மதியம் சிறப்பு அலங்கார பூஜைகளும், இரவு 8ம் ஆண்டு 27 கிராமங்களிலிருந்து பங்கு கொண்ட பெண்களின் 1008 திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது. பூஜைக்கு கோவில் தர்மகர்த்தாக்கள் சேர்மத்துரை, ராஜாமணி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் பொன்கந்தசாமி பூஜையை துவக்கி வைத்தார். ஆழ்வார்திருநகரி ஒன்றிய பாஜ செயலர் மதியழகன் வரவேற்றார். பூஜையை பெருமாள்குளம் ராமலெட்சுமி வழி நடத்தினார். இதில் பங்கேற்ற பெண்கள் விளக்கேற்றி பக்தி பாடல்கள் பாடி சுவாமியை வழிபட்டனர். இதில் கோவில் நிர்வாகிகள் சிங்கராஜ், முருகேசன், சிவா, சிவராமகணேஷ், முத்துக்கிருஷ்ணன், சிவபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோயிலில் 2ம்நாள் (6ஆம் தேதி) காலையில் வில்லிசை, 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. 3ம் நாளான நேற்று உச்சிகால பூஜை, இரவு மஞ்சள்பெட்டி ஊர்வலம், அலங்கார பூஜைகளும் நடந்தது. 4ம்நாளான இன்று காலை 10 மணிக்கு வில்விசை, 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, பிற்பகல் 2 மணிக்கு உணவு எடுத்தல். 5ம் நாளான நாளை இரவு 9 மணிக்கு செங்கிடார சுவாமிக்கு கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும், 10ஆம் தேதி6ம் நாளன்று இரவு 9 மணிக்கு சாமிதோப்பு அய்யாவின்புகழ் பாடும் சிவசந்திரனின் ஆன்மீக இன்னிசை கச்சேரி ஆகியவை நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கற்குவேல் அய்யனார் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புனித சவான் மாதம் இரண்டாம் சோமவாரத்தை முன்னிட்டு, சிவ தரிசனம் செய்ய இராமேஸ்வரம், வாரணாசி, அயோத்தி ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் ஆடி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை ... மேலும்
 
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் கோயிலில் வெளிஆண்டாள் சந்நிதி உள்ளது. இங்கு ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar