Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெருமாள்குளம் பெருமாள் கோயிலில் 1008 ... போடி பரமசிவன் கோயில் திருவிழா கொடியேற்றம்! போடி பரமசிவன் கோயில் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகும் தமிழக கோவில்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 ஏப்
2013
10:04

தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும், தமிழ் புத்தாண்டு தினத்தை, விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டும் என, அரசு அறிவித்துள்ளது. பல நூற்றாண்டு காலமாக, ஏப்ரல் 14ம் தேதியே, தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. கடந்த, தி.மு.க., ஆட்சியில், தை முதல் நாளை, புத்தாண்டு தினமாக கொண்டாட, அரசாணை வெளியிடப்பட்டு கொண்டாடப்பட்டது. பின், அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், "ஏப்ரல் 14ம் தேதியே தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படும் என, அரசாணை வெளியிட்டு, கொண்டாடப்படுகிறது.அதன்படி, இம்மாதம், 14ம் தேதி, தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, அனைத்து கோவில்களிலும், புத்தாண்டு தினக் கொண்டாட்டங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என, அனைத்து இணை ஆணையர்களுக்கும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆணை பிறப்பித்துள்ளார். சமீபத்தில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், புத்தாண்டுக்கான கொண்டாட்டங்களுக்கான முன்னேற்பாடுகளில், இப்போதிருந்தே ஈடுபட வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவை:

*புத்தாண்டுக்கு முதல் நாள் மாலையே, கோவில்களில் மின் விளக்கு அலங்காரம் செய்ய வேண்டும்.
* அன்றிரவு, அதிகளவில் பக்தர்களின் வருகையின் முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
* நள்ளிரவில், பக்தர்கள் எந்தவித இடையூறுமின்றி தரிசனம் செய்யும் வகையில் முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.
* மாவிலை தோரணங்கள் கட்ட வேண்டும்.
* கோவிலின் நுழைவாயின் இருபுறமும், வாழைமர தோரணம் அமைக்க வேண்டும்.
* புத்தாண்டு அன்று, சிறப்பு அன்னதானம் நடத்த வேண்டும். அவற்றில், லட்டு, சர்க்கரை பொங்கல், புளியோதரை போன்றவற்றை வழங்க வேண்டும்.
* சிறப்பு ஆன்மிக சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது. ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சில ... மேலும்
 
temple news
திருப்பதி;  திங்கள்கிழமை திருமலையில் பல்லவோத்ஸவம் கொண்டாடப்பட்டது. மைசூர் மகாராஜாவின் பிறந்தநாளை ... மேலும்
 
temple news
பண்ருட்டி; திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் திருபவித்ர உற்சவத்தில் உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, ... மேலும்
 
temple news
தாலி பாக்கியத்திற்காக சுமங்கலிகள் ஆடிமாதத்தில் மேற்கொள்வது அவ்வையார் நோன்பு. ஆடி செவ்வாயன்று ... மேலும்
 
temple news
கோபால்பட்டி; சாணார்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் ஆடி மாத ஏகாதசி பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar