வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு மாரியம்மன் கோயில் திருவிழா நடத்த சுவாமி சாட்டப்பட்டது.வத்தலக்குண்டு மாரியம்மன் கோயில் திருவிழா 22 நாட்களில் துவங்க உள்ளது. கடந்த ஞாயிறன்று முகூர்த்த கால் நடப்பட்டது. நேற்று சுவாமி சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கொடிக்கம்பம் நடப்பட்டது. செவ்வாயன்று, காமராஜபுரம் செல்லாயி கோயிலில், மாரியம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்படும். தொடர்ந்து 15 நாட்கள் அம்மன் மண்டகப்படிகளில் எழுந்தருளுவார். பழைய வத்தலக்குண்டு மகாபரமேஸ்வரி மாரியம்மன் திருவிழாவிற்கும் சுவாமி சாட்டப்பட்டு, கொடிக்கம்பம் நடப்பட்டது. வரும் செவ்வாயன்று பழைய வத்தலக்குண்டு செல்லாயி கோயிலில் பொங்கல் வைக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்படும். தொடர்ந்து 7 நாட்கள் அம்மன் மண்டகப்படிகளில் எழுந்தருள்வார்.