கேரளமாநிலம் திருச்சூர் புன்குன்னம் புஷ்பகிரியில் ஸ்ரீ சீதா ராமஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் மே 10ல் தொடங்கி 18 வரை வசந்த உற்சவம் கொண்டாடப்பட இருக்கிறது. வசந்த உற்சவத்ததை முன்னிட்டு மே 10ம்தேதி ரஞ்சனி காயத்ரி குழுவினரின் இசை நிகழ்ச்சியும், 11ம் தேதி பந்துலா ரேமா குழுவினரின் இசை நிகழ்ச்சியும், 12ம் தேதி மஞ்சுளா வாரியாரின் நடன நிகழ்ச்சியும், 13ம் தேதி பெங்களூர் கஜேந்திரா குழுவினரின் இசை நிகழ்ச்சியும், 14ம் தேதி பாலக்காடு கே. எல் ஸ்ரீராம் குழுவினரின் இசை நிகழ்ச்சியும், 15ம் தேதி நித்யஸ்ரீ மகாதேவன் குழுவினரின் இசை நிகழ்ச்சியும், 16ம் தேதி சஞ்சய் சுப்ரமணியனின் இசை நிகழ்ச்சியும், 17ம் தேதி ஸ்ரீராம் பிரசாத், ரவிக்குமார் குழுவினரின் இசை நிகழ்ச்சியும், 18ம்தேதி மைசூரு நாகராஜ், மஞ்சுநாத் குழுவினரின் வயலின் இசை நிகழ்ச்சியும் நடை பெற உள்ளது.