Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் ... திருத்தணி தணிகாசலம்மன் கோவில் கும்பாபிஷேகம்! திருத்தணி தணிகாசலம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருப்பெயர்ச்சி விழா: தாம்பத்ய தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 மே
2013
10:05

ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள தாம்பத்யதட்சிணாமூர்த்திக்கு, குருப்பெயர்ச்சி விழாவை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன.ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது மரகதாம்பிகா உடனுறை பள்ளிகொண்டேஸ்வரர் கோவில். பிரதோஷம் உருவாக காரண மான இக்கோவில், வளாகத்தில் தாம்பத்ய தட்சிணாமூர்த்தி, தனது மனைவி கவுரியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். குருப்பெயர்ச்சி விழாவை ஒட்டி, இங்கு தாம்பத்ய தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. முன்னதாக, மாலை, 3:00 மணிக்கு மகாசங்கல்பம், அர்ச்சனையும், தொடர்ந்து கணபதி பூஜை, புண்யாஹவசனம் ஆகிய நிகழ்ச்சிகளும், யாக சாலை அமைத்து, குருபகவான், நவகிரக, நட்சத்திர மூல மந்திரம் மற்றும் காயத்ரி மந்திர ஹோமம் ஆகியவை நடந்தன.இரவு, 8:00 மணிக்கு குருபகவான் தாம்பத்ய தட்சிணாமூர்த்தி மற்றும் நவகிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. குருப்பெயர்ச்சியை ஒட்டி, காலை முதல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழு தலைவர் மதுரெட்டி மற்றும் உறுப்பினர்கள் செய்தனர்.திருவள்ளூர்தீர்த்தீஸ்வரர் கோவிலில், குரு தட்சிணா மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, நேற்று முன்தினம் இரவு குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்றது. பூங்கா நகரில் உள்ள சிவா-விஷ்ணு கோவிலில், குரு தட்சிணாமூர்த்திக்கும், காக்களூரில் உள்ள யோகஞான தட்சிணாமூர்த்தி பீடத்தில், குருபெயர்ச்சி விழா நடைபெற்றது.இங்கு, நேற்று முன்தினம் இரவு, 9:10 மணிக்கு குருபகவான் ரிஷப ராசியில் இருந்து, மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி, குரு ஸ்தலத்தில் பரிகார மகா யாகம், 108 ஹோம திரவியங்களை கொண்டு நடத்தப்பட்டது. அதன்பின் குருபகவானுக்கு, 108 லிட்டர் பாலாபிஷேகம், விசேஷ அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில், திராளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.பேரம்பாக்கம் சோளீஸ்வரர் கோவில், திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவில், கூவம் சிவன் கோவில் உட்பட அனைத்து சிவாலயங்களிலும் குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.திருத்தணி திருத்தணி ம.பொ.சி., சாலையில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், நந்தி ஆற்றங்கரையோரம் உள்ள வீரட்டீஸ்வரர் கோவில், நாபளூர் காமாட்சி அம்மன்உடனுறை அகத்தீஸ்வரர் கோவில், கே.ஜி.கண்டிகை மலைக்கோவிலில் உள்ளசித்தீஸ்வரர் கோவில், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் உட்பட அனைத்து சிவன் கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்புஅபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பல்லி சிலைகள் மாற்ற முயற்சி நடப்பதாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் சிற்பங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar