Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாலையம்மன் கோயில் பொங்கல் திருவிழா வீரவநல்லூர் கம்பளத்தம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குறிச்சி சொக்கநாத சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2013
10:05

திருநெல்வேலி: குறிச்சி சொக்கநாதர் சுவாமி கோயிலில் 90 ஆண்டுகளுக்கு பின் மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். குறிச்சி மீனாட்சி அம்பாள் சமேத சொக்கநாத சுவாமி கோயில் மிகவும் பழமைவாய்ந்தது. இக்கோயிலில் பல லட்ச ரூபாய் செலவில் திருப்பணி வேலைகள் செய்து முடிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா கடந்த 26ம் தேதி துவங்கியது. கும்பாபிஷேக விழாவான நேற்று அதிகாலை 3 மணிக்கு மங்கள இசை, தேவாரம், திருமுறை பாராயணம், அதிகாலை 4.15 மணிக்கு பிம்ப சுத்தி, ரக்ஷா பந்தனம், ஸ்பர்சாஹூதி, நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வேத மந்திரங்கள், தேவாரம், திருமுறை பாடப்பட மங்கள வாத்யங்கள் முழங்க யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடந்தது. மூலவர் விமானம், அம்பாள் விமானம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் காலை 6.15 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சொக்கநாத சுவாமி, மீனாட்சிஅம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. காலை 8 மணிக்கு மகாபிஷேகம், அலங்கார தீபாராதனை, 9 மணிக்கு மகேஸ்வர பூஜை நடந்தது. மாலையில் பிரசன்ன பூஜை, பூவாபரண பூஜை, சொக்கநாத சுவாமி மீனாட்சியம்பாள் திருக்கல்யாணமும், தீபாராதனையும், பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடந்தது. கும்பாபிஷேகத்தை ஏரல் சங்கரபட்டர், அர்ச்சகர் கிருஷ்ணகுமார் பட்டர் நடத்திவைத்தனர். விழாவில் செயல் அலுவலர் தனலெட்சுமி, ஆய்வர் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். குறிச்சி கணேசமூர்த்தி நடுநிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar