Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாலையம்மன் கோயில் பொங்கல் திருவிழா வீரவநல்லூர் கம்பளத்தம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குறிச்சி சொக்கநாத சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2013
10:05

திருநெல்வேலி: குறிச்சி சொக்கநாதர் சுவாமி கோயிலில் 90 ஆண்டுகளுக்கு பின் மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். குறிச்சி மீனாட்சி அம்பாள் சமேத சொக்கநாத சுவாமி கோயில் மிகவும் பழமைவாய்ந்தது. இக்கோயிலில் பல லட்ச ரூபாய் செலவில் திருப்பணி வேலைகள் செய்து முடிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா கடந்த 26ம் தேதி துவங்கியது. கும்பாபிஷேக விழாவான நேற்று அதிகாலை 3 மணிக்கு மங்கள இசை, தேவாரம், திருமுறை பாராயணம், அதிகாலை 4.15 மணிக்கு பிம்ப சுத்தி, ரக்ஷா பந்தனம், ஸ்பர்சாஹூதி, நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வேத மந்திரங்கள், தேவாரம், திருமுறை பாடப்பட மங்கள வாத்யங்கள் முழங்க யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடந்தது. மூலவர் விமானம், அம்பாள் விமானம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் காலை 6.15 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சொக்கநாத சுவாமி, மீனாட்சிஅம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. காலை 8 மணிக்கு மகாபிஷேகம், அலங்கார தீபாராதனை, 9 மணிக்கு மகேஸ்வர பூஜை நடந்தது. மாலையில் பிரசன்ன பூஜை, பூவாபரண பூஜை, சொக்கநாத சுவாமி மீனாட்சியம்பாள் திருக்கல்யாணமும், தீபாராதனையும், பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடந்தது. கும்பாபிஷேகத்தை ஏரல் சங்கரபட்டர், அர்ச்சகர் கிருஷ்ணகுமார் பட்டர் நடத்திவைத்தனர். விழாவில் செயல் அலுவலர் தனலெட்சுமி, ஆய்வர் சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். குறிச்சி கணேசமூர்த்தி நடுநிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்க்கு முகூர்த்தக்கால் நடும் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது , கோலாகலமாக ... மேலும்
 
temple news
புதுச்சேரி, கவுசிக பாலசுப்பிரமணியர் கோவில் சஷ்டி நிறைவு விழாவை யொட்டி வள்ளி, தெய்வானை சமேத கௌசிக ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் இன்று மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar