Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அந்தோணியார் ஆலய கொடியேற்றும் விழா வீட்டில் சுபநிகழ்ச்சிகளில் வாழைமரம் கட்டுவது ஏன்? வீட்டில் சுபநிகழ்ச்சிகளில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விவேகானந்தர் ரதத்துக்கு அன்னூரில் உற்சாக வரவேற்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2013
11:06

அன்னூர்: சுவாமி விவேகானந்தரின் உபதேசங்களை தினமும் 10 நிமிடம் படித்தால், துணிவு பிறக்கும், என, அன்னூரில் நடந்த வரவேற்பு விழாவில், சுவாமி பக்தி காமானந்தா பேசினார். வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்தநாள் விழாவை, ஓராண்டு முழுவதும் கொண்டாட ராமகிருஷ்ண மடம் மற்றும் வித்யாலயம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், விவேகானந்தரின் சிந்தனைகளை பரப்ப ரத யாத்திரை நடக்கிறது. ஏப்ரல் 13ல் கோவையில் துவங்கிய ரத யாத்திரை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில், பயணம் செய்தபின், கோவை மாவட்டத்தில் நேற்று காலை நுழைந்தது. அன்னூர் கைகாட்டியில், விவேகானந்தர் நற்பணி மன்றம் சார்பில், துரைசாமி சித்தர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பா.ஜ., மாவட்ட செயலாளர் தர்மலிங்கம், ஒன்றிய தலைவர் திருமூர்த்தி, மன்ற ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் விவேகானந்தர் சிலைக்கு மாலையணிவித்தனர்; திரளான மக்கள் பங்கேற்றனர். சுவாமி விவேகானந்தா மெட்ரிக் பள்ளி வளாகத்தில், ரதத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை, ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் பக்தி காமானந்தா பள்ளி வளாகத்தில், விவேகானந்தர் சிலையை பிரதிஷ்டை செய்தார். வித்யாலய செயலர் அபிராமானந்தர் பேசுகையில்,""சிறுவர்களுக்கு மகிழ்ச்சியையும், இளைஞர்களுக்கு உற்சாகத்தையும், பெரியவர்களுக்கு ஆன்மிகத்தையும் வழங்குபவராக விவேகானந்தர் விளங்குகிறார். அவருடைய உபதேசங்களை பயன்படுத்தி நமது வாழ்வை உயர்த்திக் கொள்ள வேண்டும். விவேகானந்தரின் உபதேசங்களை தினமும் 10 நிமிடம் படிக்க வேண்டும். இதனால், மனதில் துணிவு பிறக்கும். தன்னம்பிக்கை ஏற்படும், என்றார்.ரத யாத்திரை பொறுப்பாளர் சசி சிகானந்தா பேசுகையில்,""இந்த ரத யாத்திரை 282 நாட்கள், 32 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் 10 ஆயிரத்து 600 கி.மீ., பயணம் செய்து, வரும் 2014, ஜனவரி, 8ல் சென்னை, மெரீனா அருகே உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நிறைவு பெறுகிறது, என்றார். பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி, பஜனை நடந்தது. புத்தக கண்காட்சியில் விவேகானந்தர் குறித்த புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தாராபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனிஸ்வர பகவான் கோவிலில் தொடர் விடுமுறை ஏராளமாக பக்தர்கள் சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
காரமடை அரங்கநாதர் கோயிலில் கிருஷ்ண பட்ச ஏகாதசி சிறப்பு வழிபாடுகாரமடை: காரமடையில் மகிழம்பூ  வாசம் ... மேலும்
 
temple news
குன்னுார்; குன்னூரில், 79வது ஆண்டு முத்துப்பல்லக்கு உற்சவம் நடந்தது. நீலகிரி மாவட்டம். குன்னூர் தந்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar