Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருநெல்வேலி நெல்லையப்பர் ... திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா! திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகத்தீஸ்வரமுடையார் கோவிலில் கல்வெட்டுகள் ஆய்வு துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2013
09:06

செஞ்சி: சென்னையை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர்கள் கள்ளப்புலியூர் அகத்தீஸ்வரமுடையார் கோவில் கல் வெட்டுக்களை ஆய்வுக்காக படி எடுத்தனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா கள்ளப்புலியூரில் பழமையான அகத்தீஸ்வரமுடைய நாயனார் கோவில் உள்ளது. பாழடைந்துள்ள இக்கோவிலை திருப்பணிகள் செய்ய கிராம மக்கள் முடிவு செய்தனர். இதற்காக கோவிலின் முழு தகவல்களை அறிய இங்குள்ள கல்வெட்டுக்களை ஆய்வு செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, அறங்காவலர் வெள்ளை கொடுத்த தகவலின் பேரில் சென்னை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் ஜெயராமன், கல்வெட்டு சிற்றெழுத்தர்கள் ஜோதி, துரை சில நாட்களாக இங்கோவிலில் உள்ள கல்வெட்டுக்களை படி எடுத்து ஆய்வு செய்தனர். கல்வெட்டு ஆய்வாளர் ஜெயராமன் கூறியதாவது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆணையர் (பொ) வசந்தி வழிகாட்டுதலில் இங்குள்ள கோவிலில் உள்ள கல்வெட்டுக்களை படி எடுத்துள்ளோம். இங்குள்ள கல்வெட்டுக்கள் 14ம் நூற்றாண்டை சேர்ந்தவை. ஜெயங்கொண்ட உத்தம சோழ வளநாட்டு களப்பலியூர் என ஊரின் பெயரும், இங்குள்ள சிவனின் பெயர் அகத்தீஸ்வர முடைய நாயனார் என்றும் உள்ளது. 14ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி செய்த ராஜநாராயண சம்புவராயர் கோவிலுக்கு கொடுத்த கொடைகள் குறித்தும், விஜயநகர மன்னன் கம்பண உடையார் குறித்தும் கல்வெட்டில் தகவல்கள் உள்ளன. கல்வெட்டுக்கள் அனைத்தும் படி எடுக்கப்பட்டுள்ளன. இவற்றை முழுமையாக ஆய்வு செய்த பின்னர் கோவில் குறித்த தகவல்கள் தெரிய வரும். இவ்வாறு கல்வெட்டு ஆய்வாளர் ஜெயராமன் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar