Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அடுத்த 3 ஆண்டுகளுக்கு கேதார்நாத், ... வரதராஜ பெருமாள் கோவிலில் கருடசேவை கோலாகலம்! வரதராஜ பெருமாள் கோவிலில் கருடசேவை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டி கோவில்களில் வருண பகவானுக்கு யாகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2013
10:06

தமிழகத்தில், மழை பெய்ய வேண்டி, பல்வேறு கோவில்களில் நேற்று, யாகம் நடந்தது. இன்றும் பல்வேறு கோவில்களில், யாகம் நடக்க உள்ளது. பல்வேறு மாவட்டங்களில், ஜூலை, 1ம் தேதி வரை, யாகம் நடக்கிறது. தமிழகத்தில், கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் பொய்த்துப் போனது; இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததுடன், தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. விவசாயம் பெரும் பிரச்னைக்குள்ளானது. இதனால், தமிழகமே அவதிக்குள்ளாகி வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள, ஐந்து பெரிய கோவில்களில், மழை வேண்டி யாகம் நடத்த, இந்து சமய அறநிலையத் துறை, அனைத்து மாவட்ட இணை ஆணையர்களுக்கும், கடந்த வாரம் உத்தரவிட்டது. பல கோவில்களில், வருண பகவானுக்கு நேற்று யாகம் நடந்தது. சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடந்த யாகத்தில், அமைச்சர் செந்தூர் பாண்டியன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கோவிலுக்கும், ஆகம விதிகளுக்கு தகுந்தாற்போல், யாகம் நடத்தப்படுகிறது. முருகன் கோவில்களில், ருத்ராபிஷேகம்; பெருமாள் கோவில்களில், திருமஞ்சனம்; சிவன் கோவில்களில், நந்தி சிலைக்கு கழுத்து வரை பொன்னாடை போர்த்தி, தொட்டி போல் அமைத்து, பூஜை; அம்மன் கோவில்களில், பால், தயிர், இளநீர் அபிஷேகம் நடத்தப்படும். மேலும், திருஞானசம்பந்தர் மழை வேண்டி பாடிய பாடல்கள் பாடப்படும். வீணையில், ஆனந்த பைரவி, ரூபவாகிணி ராகங்கள் இசைக்கப்படும். யாகத்தின் போது, 60 வேத விற்பன்னர்களை ஈடுபடுத்தவும், ஹோமத்தில் திரளான பக்தர்களை கலந்து கொள்ள செய்யவும் ஏற்பாடு நடந்து வருகிறது. அதற்கான பணிகளை, அந்தந்த கோவில் நிர்வாகமே மேற்கொள்கிறது. தமிழகத்தில் உள்ள, 160 பெரிய கோவில்களில், யாகம் நடத்துவதற்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது. - நமது நிருபர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar