முருகனுக்கு வேல் கொடுத்தது பார்வதி என சொல்வதுண்டு. ஆனால், சிவன் வேலைக் கொடுத்ததாகவும், பார்வதி அதற்கு சக்தி அளித்ததாகவும் சொல்வர். ஜீவன் இருந்தால் மட்டும் போதாது. அதற்கு சக்தி இருக்க வேண்டும். சக்தி இல்லாத ஜீவன் வாழ்ந்தும் பயனில்லாதது ஆகிறது. எனவே தான் முருகனின் வேலுக்கு ஜீவவேல் என்றில்லாமல், சக்திவேல் என்ற பெயர் நிலைத்தது.