Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்வெட்டில் தகவல்: திண்டிவனம் வரை ... விநாயகர் உருவம் பொறித்த நாணயம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசாணியம்மன் கோவிலில் நிறம் மாறிய தங்க மலர்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2013
10:07

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், அம்மனுக்கு அன்றாடம் அர்ச்சனை செய்யப்படும், "தங்கமலர்கள் வழக்கத்துக்கு மாறாக நிறம் மாறி காணப்பட்டது; இதைப் பார்த்த பக்தர்கள் மனவேதனை அடைந்தனர். கோவை மாவட்டம், ஆனைமலையில் புகழ்பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. அம்மனுக்கு அன்றாடம் மூன்று கால பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறுகின்றன. இது தவிர, தங்கத்தால் செய்யப்பட்ட மலர்களால், அர்ச்சனையும் செய்யப்படுகிறது. இதற்கு, பக்தர்களிடமிருந்து, 100 ரூபாய் கட்டணம் பெறப்படுகிறது. இந்த தங்க மலர்கள், ஆரம்ப காலத்தில், தங்கத்துக்கான மஞ்சள் நிறத்தில் காட்சியளித்தது. தற்போது, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் நிறத்தில் காட்சியளிக்கிறது. தங்கமலர் அர்ச்சனைக்கு, நேற்று மதியம் கட்டணம் செலுத்தி சென்ற பக்தர் ஒருவர், கோவில் அர்ச்சகரிடம் இதுபற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், "தங்கம் தான் இப்படி நிறம் மாறிவிட்டது என்றார்.

இது குறித்து, அந்த பக்தர், கோவில் உதவி கமிஷனரிடம் புகார் தெரிவித்தார். உதவி கமிஷனர் அனிதாவிடம் கேட்டதற்கு, ""தங்க மலர்களின் நிறம் மாறிவிட்டது உண்மை தான். தங்கநகை மதிப்பீட்டாளரை வரவழைத்து, பரிசோதிக்க உத்தரவிட்டுள்ளேன். 916 தரத்தில், கோவிலுக்கு வாங்கிக் கொடுக்கப்பட்ட தங்கமலர்களின் தன்மை, எப்போதும் மாறாது. ஆனால், இந்த தங்கமலர்களின் நிறமாற்றம் குறித்து விசாரணை நடத்தப்படும், என்றார். தங்கமலர்களை கோவிலுக்கு தயாரித்து வழங்கிய, நகைகடை உரிமையாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: கோவிலுக்கு செய்து கொடுக்கும் நகை என்பதால், தூய்மையான, 916 தரத்திலான தங்கத்தில் தான், 108 மலர்களை செய்து கொடுத்தோம். பராமரிக்கும் முறையையும் சொல்லிக் கொடுத்தோம். ஆனால், அர்ச்சகர்கள் சரியாக பராமரிப்பதில்லை. ஆனாலும், தங்கத்தின் நிறம் எப்படி பயன்படுத்தினாலும், மாற வாய்ப்பு இல்லை. நிறம் மாறியதற்கான காரணத்தை அதிகாரிகள் தான் கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி ... மேலும்
 
temple news
 நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 194-ம் அவதார தின விழாவையொட்டி, நேற்று, நாகர்கோவிலில் இருந்து சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar