புதுக்கோட்டை: அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு இன்று 12ம் தேதி பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் கோவில்களில் ஒன்று அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோ வில். இங்கு ஆண்டுதோறும் ஆடித்திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம். இந்தாண்டு திருவிழா வரும் 23ம் தேதி துவ ங்கி ஆகஸ்ட் 10 முடிய தொட ர்ந்து 19 நாட்கள் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 31ம் தேதி தேர்திருவிழா நடக்கிறது. இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள இவ்விழாவில் ராஜ அலங்காரத்துடன் அம்மன் திருத்தேரில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தேர்த்திருவிழாவில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி அருகில் உள்ள சிவகங்கை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம், தஞ்சை, திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் தொட்டு இழுக்க உள்ளனர். ஆகஸ்ட் 9ம் தேதி தெப்பத் திருவிழாவும், 10ம் தேதி விடையாற்றி நிகழ்வும் நடக்கிறது. ஆடித்திருவிழாவை முன்னிட்டு இன்று பூச்சொரிதல் விழா நடக்கிறது. அறந்தாங்கி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் பல்லக்குளில் பக்தர்கள் பூ தட்டுகள் எடுத்துவந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்கின்றனர். இன்று இரவு விடிய, விடிய அம்மனுக்கு புஷ்பாபிஷேகம், சிறப்பு அலங்காரம், அலங்கார தீபாராதனை போன்ற நிகழ்ச்சி நடக்கிறது.