பதிவு செய்த நாள்
17
ஜூலை
2013
10:07
வாரணாசி: காசி விஸ்வநாதர் கோவிலின், இரு கோபுரங்களுக்கு, தங்கத் தகடு பொருத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. உத்தர பிரதேசம், வாரணாசியில், விஸ்வநாதர் கோவில் ஆணையர் தலைமையில் நடந்த, தேவஸ்தான கூட்டத்தில், ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள்: காசி விஸ்வநாதர் கோவிலின், இரண்டு கோபுரங்களுக்கு, 20 கோடியே, 22 லட்சம் ரூபாய் செலவில், விரைவில், தங்கத் தகடு பொருத்தப்படும். கோவிலில் நடைபெறும் பூஜைகள் மற்றும் சேவைகளுக்கான கட்டணம், 25 சதவீதம் உயர்த்தப்படும்; அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஊதியமும், 15 சதவீதம் உயர்த்தப்படும். கோவிலின் வரலாறு குறித்த, 25 பக்க செய்திகள், இணையதளத்தில், "அப்லோடு செய்யப்படும். கோவிலுக்கு வரும் பக்தர்கள், தாங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு, உடனடியாக ரசீதை பெறும் வகையில், சிறப்பு நன்கொடை மையங்கள் திறக்கப்படும். திருப்பதி மற்றும் சாய்பாபா கோவிலில் உள்ளது போன்ற நடைமுறைகள், இங்கும் விரைவில் அமல்படுத்தப்படும்.