Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரும்பு ஏந்தும் கற்பகம்! என்ன காரணம் இறைவா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2013
03:07

*ஒருவன் எத்தனை முறை தோல்வியுற்றாலும், மனதிற்குள் தோல்வியடையாமல் இடைவிடாமல் முயற்சி செய்பவனே உண்மையான வெற்றியாளன். உலகமே அவனைத் தோல்வியாளனாக கருதினாலும் கூட அவன் சிறந்த வெற்றியாளனே.
*உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்வதால் வாழ்க்கை நரகமாக மாறிவிடும். எனவே, யாரைக் கண்டுபொறாமைப்படத் தேவையே இல்லை.
*உங்களிடம் என்ன இருக்கிறதோ, நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அதை எண்ணி பெருமிதம் கொள்ளுங்கள். உங்களின் தனித்தன்மை உலகில் வேறு யாருக்கும் கிடையாது.
*தீமையே உலகத்தில் இல்லை என்று கூறுவது உண்மைக்குப் புறம்பானது. அதற்காக, தீமையை கண்டு அஞ்சி ஓடக்கூடாது. பயந்து வெம்பக்கூடாது. எதிர்த்துப் போரிடும் மனோதிடம் வேண்டும்.
*மனதில் எழும் எதிர்மறை எண்ணங்களைக் கண்டு பயப்படாதீர்கள். விவேகத்தைப் பயன்படுத்தி தவறான எண்ணங்களை உற்று நோக்குங்கள். அவை இருந்த இடம் தெரியாமல் மறையத் தொடங்கும்.
*சூழ்நிலைகளை உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதித்ததால், உங்களை நீங்களே இழந்து விட நேரிடும். வெற்றிகொள்வதற்காகவே இந்த மண்ணில் மனிதராகப் பிறந்திருக்கிறீர்கள்.
*கவலைப்பட்டுக் கொண்டு காலத்தை வீணாக்காதீர்கள். பிரச்னை தீர்வதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்குங்கள். அதற்கான நடவடிக்கையில்துரிதமாக ஈடுபடுங்கள்.
*தன்னல மற்ற மனிதர்களிடம் செல்வம் சேர்ந்தால் அதுஒரு வரப்பிரசாதம். ஆனால், சுயநலமானவர்களிடம் பணம் சேரும்போது சாபக்கேடாகமாறுகிறது.
*மனதில் எப்போதும் ஆக்கபூர்வமான எண்ணத்தை நிரப்புங்கள். கவலைப்படுவதால் காலமும், மனோசக்தியும் விரயமாகிறது என்பதை உணர்வது அவசியம்.
*சோம்பேறியை யாரும் விரும்ப மாட்டார்கள். இறைவனும் கூட கைவிட்டு விடுவான். மனிதன் வாழ்வில் எதையாவது சாதிக்க முயற்சித்தபடி இருக்க வேண்டும்.
*விடாமுயற்சி உள்ளவர்கள் வாழ்வில் எத்தனையோ சாதனைகளைப் படைத்துஇருக்கின்றனர். அதற்காக வெறும் பணத்தை மட்டுமே உங்களின் வெற்றிக்கு அளவுகோலாக ஆக்கி விடாதீர்கள்.
*முயற்சிக்காமல் உலகை விட்டுத் தப்பி ஓட நினைப்பது முட்டாள்தனம். எங்குசென்றாலும் மனம் நம்முடன் தான் இருக்கும். அதனால் மனதை ஆளக் கற்றுக் கொள்ளுங்கள்.
*நான் ஒருவருக்கும் மனதாலும் தீங்கு இழைக்கவில்லை என்ற நிலையை எட்டுபவன், இந்த பூமியிலேயே மகிழ்ச்சி மிக்க மனிதனாக இருப்பான்.
*எல்லாரிடமும் நட்புடன் பழகுங்கள். நட்பு என்னும் பொக்கிஷம்தான் உங்களுடைய மிக உயர்ந்த சொத்து.
*உண்மையான நண்பர்களிடம் கொண்ட நட்பானது பிறவியை முடித்த பின்னும் நம்மைத் தொடரும். இறைவனின் இல்லத்தில் சிநேகிதர்களை சந்திப்பீர்கள். ஏனெனில் உண்மையான அன்புக்குஅழிவில்லை.
*வாழ்வோ, சாவோ, சுகமோ, துக்கமோ வாழ்வில் எந்தநிலையிலும் கவலை வேண்டாம்.இறைவா! நான் உன் குழந்தை! என்ற மனப்பான்மையுடன் செயல்படுங்கள்.
-பரமஹம்ச போசானந்தர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar