Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் கோயில் ஆடிப்பூர ... சபரிமலை மேல்சாந்தி தேர்வு விதிகள் கடுமையாயின! சபரிமலை மேல்சாந்தி தேர்வு விதிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலில் பவுர்ணமி கிரிவலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2013
10:07

கழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற முருகத்தலங்களில் அறுபடை வீடுகளுக்கு அடுத்தாற்போல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகாவை சேர்ந்த கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோயில் மலையடிவாரத்தில் அமைந்துள்ளதால் தமிழகத்தின் தென்பழனி என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. மேலும் கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பவுர்ணமி கிரிவலம் நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசித்தி பெற்றதாகும். தவிர திருவண்ணாமலை கிரிவலத்திற்கு செல்ல முடியாத பக்தர்களில் பெரும்பாலானோர் கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலில் மலைக்குன்றை சுற்றி நடைபெறும் கிரிவலத்தில் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் இம்மாத பவுர்ணமியில் நடந்த கிரிவலத்தை கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன் துவக்கி வைத்தார். தொடர்ந்து கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயில் மேற்கு வாசலில் துவங்கிய பவுர்ணமி கிரிவலத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஹரஹர சங்கரா, சிவசிவ சங்கரா என்ற பக்தகோஷத்துடன் மலைக்குன்றை சுற்றி வந்தனர். மேலும் கழுகுமலை பஸ் ஸ்டாண்ட் ரோடு, கிரிப்பிரகார வீதி மேற்கு மற்றும் கிழக்கு, இந்திரபிரஸ்தம் தெரு, அனந்தம்மன் கோயில் தெரு, கீழபஜார், அரண்மனை வாசல் தெரு வழியாக சென்று தெற்கு வாசலில் முடித்தனர். தவிர பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பவுர்ணமி கிரிவலக்குழு தலைவர் முருகன், உழவாரப்பணிக்குழு தலைவர் முத்துசாமி, மூன்று மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பூபதித்திருநாள் ( தை தேர்) இன்று ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே எருமாடு ஸ்ரீ துர்கா பகவதி ஆலய திருவிழாவில் தெய்யம் துள்ளல் , பக்தர்களைக் ... மேலும்
 
temple news
பழநி; பழநி தைப்பூசத்திற்கு முருகன் மலைக்கோயில் செல்ல பக்தர்களின் வசதிக்கேற்ப பாதை மாற்றம் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேகம், பிப்., 11ல் நடக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar